Asianet News TamilAsianet News Tamil

தோப்பில் நிர்வாண நிலையில் உல்லாசம்.. கையும் களவுமாக பிடித்த கணவர்.. இறுதியில் நடந்த பயங்கரம்.!

கடந்த 6ம் தேதி மாலை மீனாட்சிப்பேட்டை மரவள்ளி தோப்பில் கிருஷ்ணகுமாரும், வனஜாவும் உல்லாசமாக இருந்ததை பார்த்த முருகன் இருவரையும் திட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வனஜா, கிருஷ்ணகுமார் ஆகியோர் முருகனை சரமாரியாக தாக்கி கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். 

illegal love affair...husband murder
Author
Cuddalore, First Published Jul 17, 2021, 1:49 PM IST

கள்ளக்காதல் தகராறில் கணவரை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவியை கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிபேட்டை ஜேஜேநகரை சேர்ந்தவர் மணிவேல் மகன் முருகன்(38). கட்டிட தொழிலாளி. இவர் தனது அக்கா மகள் வனஜாவை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 6ம் தேதி முருகன், வீட்டின் அருகில் மர்மமான முறையில் வீட்டின் அருகே உயிரிழந்து கிடந்தார். அவர் குடிபோதையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரது உடலை மனைவி வனஜா மற்றும் உறவினர்கள் அடக்கம் செய்ய முயன்றனர். ஆனால், நன்றாக இருந்த ஒருவர் திடீரென உயிரிழந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, போலீசார் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

illegal love affair...husband murder

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மனைவி வனஜாவிடம் போலீசாரிடம் விசாரணை நடத்தினர். இதில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.  இதில், கிருஷ்ணகுமாரும், முருகனும் நண்பர்கள். ஒன்றாக சேர்ந்து கட்டிட வேலைக்கு செல்வதால் முருகன் வீட்டிற்கு கிருஷ்ணகுமார் அடிக்கடி  வந்துசென்றுள்ளார். இதனால், வனஜாவுக்கும், கிருஷ்ணகுமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

illegal love affair...husband murder

இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததால் முருகன் இருவரையும் கண்டித்தார். ஆனால், அதனையும் மீறி கடந்த 6ம் தேதி மாலை மீனாட்சிப்பேட்டை மரவள்ளி தோப்பில் கிருஷ்ணகுமாரும், வனஜாவும் உல்லாசமாக இருந்ததை பார்த்த முருகன் இருவரையும் திட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வனஜா, கிருஷ்ணகுமார் ஆகியோர் முருகனை சரமாரியாக தாக்கி கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். மறுநாள் காலை வனஜா முருகன் குடிபோதையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார். இதையடுத்து போலீசார், இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து இருவரையும் கைது செய்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios