Asianet News TamilAsianet News Tamil

உல்லாசத்திற்கு இடையூறு.. பெற்ற குழந்தையை துடிதுடிக்க கொன்ற காமவெறிப்பிடித்த தாய்..!

உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த 4 வயது சிறுவனை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தாய் மற்றும் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். 

illegal love...4 year old boy murder...mother arrested
Author
Nagapattinam, First Published Jul 29, 2021, 12:10 PM IST

உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த 4 வயது சிறுவனை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தாய் மற்றும் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். 

நாகை மாவட்டம், நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் அரவிந்த் (31). இவர், கார் மற்றும் வாகனங்களுக்கு டிங்கரிங் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அபர்ணா(22). இவர்களது மகன் கவித்திரன்(4). இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். பின்னர் உறவினர்கள் சமாதானம் செய்து வைத்த பின் மீண்டும் சேர்ந்து குடும்பம் நடத்தினர்.

illegal love...4 year old boy murder...mother arrested

இந்நிலையில், கார்த்திக் அரவிந்த் சென்னையில் தங்கி இருந்து டிங்கரிங்  வேலை பார்த்து வருகிறார். அபர்ணா தனது குழந்தையுடன் தாமரைகுளம் தென்கரை பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் தாமரைகுளம் மேல்கரை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ்(24) என்பவருடன் அபர்ணாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இருவரும் நாகை காடம்பாடி சூர்யா நகர் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக கணவன்-மனைவி போல் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.

illegal love...4 year old boy murder...mother arrested

இந்நிலையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக தனது மகன் கவித்திரனை கடந்த 26-ம் தேதி இரவு அபர்ணா தனது துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும், இதற்கு சுரேஷ் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த அக்கம்பக்கத்தினர் சென்னையில் உள்ள கார்த்திக் அரவிந்த்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அளித்த தகவலின்பேரில் வெளிப்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் கவித்திரனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

illegal love...4 year old boy murder...mother arrested

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அபர்ணாவையும், அவருடைய கள்ளக்காதலன் சுரேசையும் நேற்று கைது செய்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற குழந்தையை தாயே கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios