புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்ற 25 வயது இளைஞனும் சத்யா என்ற 35 வயதுடைய பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது.

குழந்தையும் வேண்டாம் குடும்பமும் வேண்டாம்.. கள்ளக்காதலே முக்கியம்...! லாட்ஜில் ரூம் போட்டு காதல் ஜோடி தற்கொலை...! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதீத காதல் மோகத்தால் வீட்டை விட்டு வெளியேறி தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி தற்கொலை செய்து கொண்டு உள்ளனர் ஊர் காதல் ஜோடி

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்ற 25 வயது இளைஞனும் சத்யா என்ற 35 வயதுடைய பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இவர்கள் இருவருமே திருமணமானவர்கள்.. குழந்தைகளும் இருக்கின்றனர்.இந்த நிலையில் கள்ளக்காதல் மோகத்தால் குடும்பத்தையும் குழந்தைகளையும் தவிக்க விட்டு இருவரும், இவர்களின் இரண்டு குடும்பங்களை விட்டு வெளியேறி ரமேஷ்வரம் கோவில் அருகே உள்ள ஓர் தனியார் விடுதி விடுதியில் தனியாக அறை எடுத்து உள்ளனர்

பின்னர் விடுதி அறையை சுத்தம் செய்ய பணியாளர் ஒருவர் கதவை தட்டியும் திறக்கப்படாததால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது சத்யா மற்றும் முருகேசன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏன் தற்கொலை செய்துள்ளனர். தற்கொலைக்கு என்ன தான் உண்மையான காரணம் ? எதற்காக விடுதிக்கு வந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? இது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.