உல்லாசத்தின் போது ஏற்பட்ட தகராறு... நிர்வாண நிலையில் அண்ணியை கொடூரமாக குத்திக்கொன்ற கள்ளக்காதலன்.!
கந்தசாமி, கிருத்திகா வீட்டிற்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கந்தசாமி கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்தது தெரியவந்தது.
உல்லாசமாக இருந்தபோது ஏற்பட்ட தகராறில் இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் அருகே திருநீலகண்டபுரத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி (35), சிற்பி. இவரது மனைவி கிருத்திகா (28. இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளன. நேற்று பொன்னுசாமி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். அப்போது, கிருத்திகா கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக உயிரிழந்து இருப்பதை கண்டு கணவர் பொன்னுசாமி அதிர்ச்சியடைந்தார்.
உடனே இதுதொடர்பாக மூலனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கிருத்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திருநீலகண்டபுரத்தில் வசிக்கும் பொன்னுசாமியின் தம்பியும் சிற்பியுமான கந்தசாமிக்கும் (33), கிருத்திகாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
நேற்று கந்தசாமி, கிருத்திகா வீட்டிற்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கந்தசாமி கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, தலைமறைவாக உள்ள கந்தசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.