Asianet News TamilAsianet News Tamil

மாமனார், மாமியாரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மருமகன்...!

அருப்புக்கோட்டை அருகே தகாத உறவை கண்டித்ததால் மாமனார், மாமியார் ஓட ஓட விரட்டி மருமகன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

illegal affairs...father in law and mother in law murdered
Author
Tamil Nadu, First Published Dec 25, 2018, 1:28 PM IST

அருப்புக்கோட்டை அருகே தகாத உறவை கண்டித்ததால் மாமனார், மாமியார் ஓட ஓட விரட்டி மருமகன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வீரசோழன் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகன் கணேசனும், வீரசோழனை சேர்ந்த செந்திவேல் என்பவரது மகள் முனீஸ்வரியும் கடந்த 4 ஆண்டுகளுக்கு பெற்றோர்கள் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. illegal affairs...father in law and mother in law murdered

இந்நிலையில் கணேசனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணேசன்-முனீஸ்வரி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அதிர்ச்சி அடைந்த முனீஸ்வரி தனது நிலைமை குறித்து பெற்றோர்களிடம் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து ஆத்திரமடைந்த பெற்றோர் கீழசிம்பூரில் உள்ள தனது மருமகன் வீட்டிற்கு சென்று கணேசனின் தந்தை பாண்டியிடம் பேச தொடங்கினர். பின்னர் நாளடைவில் வாக்குவாதம் முற்றியது. இதில் கடும் ஆத்திரம் அடைந்த மருமகன் கணேசன் மற்றும் அவரது தந்தை பாண்டி ஆகியோர் முனீஸ்வரி பெற்றோரை  ஓட...ஓட... விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். illegal affairs...father in law and mother in law murdered

இதில் செந்தில்வேல் மற்றும் வனிதா ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கொலை தொடர்பாக வீரசோழன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்திவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து தலைமறைவாக இருந்த கணேசன் மற்றும் அவரது தந்தை பாண்டின் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.  

Follow Us:
Download App:
  • android
  • ios