Asianet News TamilAsianet News Tamil

நினைக்கும் போதெல்லாம் வீட்டை விட்டு வெளியேறி உல்லாசம்.. மருமகனுடன் சேர்ந்து மகளை போட்டுத்தள்ளிய தாய்..!

வீட்டை விட்டு அடிக்கடி காதலனை சந்திக்க செல்லும் ரஞ்சிதா தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் நாளடைவில் கணவர் கல்யாணகுமாருக்கு தெரிய வந்து மனைவியை கண்டித்துள்ளார்.

illegal affair...Wife murder in theni
Author
Theni, First Published Jul 27, 2021, 2:51 PM IST

கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக மருமகனுடன் சேர்ந்து தாய், மகளை கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடிய  3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தேனி மாவட்டம் உத்தம்பாளையம் அருகே ராயப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணகுமார்(38). இவருக்கு ரஞ்சிதா (29) என்ற மனைவியும், 8 வயதில் மகளும் உள்ளனர். கல்யாணகுமார் அப்பகுதியில் கட்டட வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், ரஞ்சிதா திடீரென உயிரிழந்துவிட்டதாக கூறி அவரது உடலை எரிக்க முயன்றனர். இந்த தகவல் எப்படியோ போலீசாருக்கு தெரியவந்ததையடுத்து மயானத்துக்கு வந்த போலீசார் பாதி எரிந்துகொண்டிருந்த நிலையில் இருந்த ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

illegal affair...Wife murder in theni

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ரஞ்சிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசாருக்கு தெரியாமல் உடலை எரித்ததாக கல்யாணகுமார் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கருதிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதனிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்தை நெரித்து ரஞ்சிதா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து,  கல்யாணகுமார், அவரது தாய், நண்பர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

அதில், போலீசாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில்;- கல்யாணகுமாருக்கும் ரஞ்சிதாவுக்கும் கடந்த 8 ஆண்டுகள் முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் ஆனைமலையன்பட்டியைச் சேர்ந்த ஒருவருடன் ரஞ்சிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. வீட்டை விட்டு அடிக்கடி காதலனை சந்திக்க செல்லும் ரஞ்சிதா தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் நாளடைவில் கணவர் கல்யாணகுமாருக்கு தெரிய வந்து மனைவியை கண்டித்துள்ளார்.

illegal affair...Wife murder in theni

ஆனாலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற ரஞ்சிதா காதலனுடன் தங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனைவியை மீட்டு தருமாறு கல்யாணகுமார் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்படி, ரஞ்சிதாவை மீட்டு அறிவுரை வழங்கி கல்யாணகுமாருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு வந்ததும் கல்யாணகுமாரும் அவரது தாயும் சேர்ந்து ரஞ்சிதாவிடம் கள்ளக்காதலை விட்டுவிடுமாறு கூறியுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரமடைந்த கல்யாணகுமார் ரஞ்சிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். அப்போது, ரஞ்சிதாவின் கால்களை மாமியார் பிடித்துக்கொண்டு உதவி செய்துள்ளார். பின்னர் விஷயம் வேலியில் தெரியாதவாறு உடலை எரித்துவிட கல்யாணகுமாரின் நண்பரும் உதவியது தெரிய வந்தது. இதையடுத்து, மூன்று பேர் மீதும் கொலை வழக்கை பதிவு செய்த போலீசார் கைது செய்த் சிறையில் அடைத்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios