Asianet News TamilAsianet News Tamil

வேறு ஆணுடன் பழகிய மனைவி ! விரக்தியில் கணவன் செய்த செயலைப் பாருங்க !!

கோவை  அருகே மனைவி வேறு ஒருவருடன் பழகியதால்  விரக்தி அடைந்த கணவர், தனது 13 வயது மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

husband sucide with his son
Author
Coimbatore, First Published Jun 7, 2019, 10:14 AM IST

கோவை சரவணம்பட்டியை அடுத்த சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன். வீட்டிலேயே தையல் தொழில் செய்து வந்த இவர், மனைவி அலமேலு மற்றும் மகன் யோகேஷ்  ஆகியோருடன்  வசித்து வந்தார். அலமேலு ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்த நிலையில், அங்கு உடன் பணிந்து வரும் ஒருவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவ்வப்போது செல்போன் மூலம் அவர்கள் பேசிக் கொண்டதை கண்ட அர்ஜுனன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்னை நிலவி வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை கணவன், மனைவி இடையே வாய் தகராறு முற்றியதும் அலமேலு வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார்.

husband sucide with his son

மாலையில் வீட்டிற்கு வந்தபோது கணவர் அர்ஜுனன் மற்றும் மகன் யோகேஷ் இருவரும் அங்கிருந்த மின்விசிறி மற்றும் தொட்டில் கட்ட அமைக்கப்பட்டிருந்த கம்பி ஆகியவற்றில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர்,இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் குடும்பத்தகராறு காரணமாகவே அர்ஜுனன் தனது மகனுடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

husband sucide with his son

மனைவி தனது பேச்சை கேட்காமல்தொடர்ந்து தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததால், மனமுடைந்த அர்ஜூனன், அலமேலுவுடன் மகன் யோகேசை விட்டுச் செல்ல மனமில்லாமல் சிறுவன் யோகேஷிற்கு தேனில் விஷத்தை கலந்து கொடுத்துவிட்டு, அதன் பின்னர் சேலையை சிறுவனின் கழுத்தில் சுற்றி மின்விசிறியில் தொங்க விட்டுள்ளார். 

பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios