கப்பலில் கணவன்.. லீசுக்கு குடி வந்த இளைஞனுடன் மனைவி உல்லாசம்.. கள்ளக் காதலனை காரை விட்டு தூக்கி அதகளம்.
லாட்ஜில் லீசுக்கு குடி வந்தவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவி, கணவனையே கொல்ல திட்டம் போட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில் இறுதியில் கள்ளக்காதலனை கணவன் கார் ஏற்றி கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
லாட்ஜில் லீசுக்கு குடி வந்தவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவி, கணவனையே கொல்ல திட்டம் போட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில் இறுதியில் கள்ளக்காதலனை கணவன் கார் ஏற்றி கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
முழு விவரம் பின்வருமாறு:- நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆசிரியர் குடியிருப்பு பார்வதி மந்திரம் தெருவை சேர்ந்தவர் வினோத் விக்ட்டர் (35) வயதாகும் இவர் கப்பலில் பணியாற்றி வருகிறார். இவர் தனக்கு சொந்தமான வேளாங்கண்ணி மாதா குளம் அருகில் உள்ள ஏஞ்சல் லாட்ஜ்ஜை வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்த மதன் கார்த்தி என்பவருக்கு ஒரு வருட குத்தகைக்கு வழங்கினார் வினோத் விக்டர். இவர் கப்பலில் பயணம் செய்து விட்டு நீண்ட மாதங்களுக்கு ஒரு முறை வீட்டிற்கு வரும் நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட மதன் கார்த்தி, வினோத் விக்டரின் மனைவி மரியா ரூபினா மார்ட்டினா உடன் நட்பாக பழகி வந்தார் பின்னர் கள்ளக் காதலாக மலர்ந்தது.
இதையடுத்து கப்பலில் இருந்து வீடு திரும்பிய வினோத் விக்டர் விடுதி கணக்கைப் பார்த்தபோது மதன் போட்டிருந்தா ஒருவருட லீஸ் முடிந்தது தெரியவந்தது இதனால் அவரை விடுதியை காலி செய்து கொடுக்கும்படி கேட்டுள்ளார் விக்டர். ஆனால் மதன் கார்த்தி காலி செய்ய மறுத்து விட்டார். இதனால் இருவருக்கும் இடையே சில மாதங்களாக பிரச்சினை இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில் தனது சொந்த காரின் ஓட்டுனரை வைத்து தனது மனைவியுடன் வெளியே சென்று விட்டு காரில் நாகையிலிருந்து வினோத் விக்டர் வேளாங்கண்ணி திரும்பிக்கொண்டிருந்தபோது, வேளாங்கண்ணி அருகே மதன் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் காரை மறித்தனர்.
அப்போது திடீரென கணவனை மட்டும் சிக்க வைத்துவிட்டு மரியா ரூபினா மார்ட்டினா மற்றும் ஓட்டுநர் ஆல்வின் இறங்கி ஓடினர். அப்போது மதன் கார்த்திக்கும் அவரது நண்பர்களும் வினோத்தின் காரை அடித்து நொறுக்கினர், விக்டரை காரிலிருந்து வெளியே இழுத்துப் போட முயன்றனர். அப்போது கண்ணில் படுகாயமடைந்து ரத்தம் சொட்ட சொட்ட இருந்த விக்டர் கீழே இறங்கினால் நிச்சயம் மரணம் நேர்ந்துவிடும் என முடிவு செய்து காரில் இருந்து கொண்டே காரை ஸ்டார்ட் செய்து வேகமாக முன்னே சென்றார். ஆனால் விடாமல் மதன் கார்த்தி தனது நண்பர்களுடன் விக்டரை விரட்டினார். ஆனால் காரை நிறுத்தாமல் வினோத் விக்டர் வேகமாக காரை இயக்கினார். அப்போது மதன் கார்த்தி அவரின் வாகனத்திற்கு குறுக்கே வந்து மரித்தார்.
ஆனால் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த வினோத் விக்டர் காரை வேகமாக எடுத்துச் சென்றார், அப்போது குறுக்கே வந்த மதன் கார்த்தி காரில் மீது கார் மோதி தூக்கி வீசப்பட்டார், அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது இந்நிலையில் கண்ணில் காயத்துடன் நாகப்பட்டினம் காவல் நிலையத்தில் வினோத் விக்டர் தஞ்சமடைந்தார். நடந்த விவரத்தை காவல்துறையிடம் கூறினார். இதற்கிடையில் காரில் அடிபட்ட மதன் கார்த்திக்கின் இடது கை மற்றும் இடது மார்பில் படுகாயமடைந்து நாகை அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அவரது நண்பர்களும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய வேளாங்கண்ணி போலீசார் வினோத் விக்ட்டர் மற்றும் அவரது மனைவி மரியா ரூபினா மார்ட்டினா ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலனை வைத்து கணவனை தீர்த்துக் கட்ட மனைவி மற்றும் ஓட்டுநர் திட்டமிட்டிருந்த நிலையில் இந்த விபத்து நடந்தது தெரியவந்தது.