Asianet News TamilAsianet News Tamil

கணவரை கொலை செய்து நாடகமாடிய மனைவி... அதிரடி கைது..!

திருச்செங்கோடு அருகே தூக்கிங் கொண்டிருந்த கணவரின் கழுத்தை மனைவி கத்தியால் அறுத்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

husband murder... wife arrest
Author
Tamil Nadu, First Published May 24, 2019, 5:37 PM IST

திருச்செங்கோடு அருகே தூக்கிங் கொண்டிருந்த கணவரின் கழுத்தை மனைவி கத்தியால் அறுத்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தண்ணீர் பந்தல்பாளையத்தை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவர் 2-வது மனைவி பூங்கொடி மற்றும் இரு மகன்களுடன் வசித்து வருகிறார். கணவன் மனைவி இருவரும் ஒன்றாக விசைத்தறி தொழிலை செய்து வந்தனர். இந்நிலையில் வேலை செய்யும் இடத்தில் கல்யாண சுந்தரம் ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. husband murder... wife arrest

இதனால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு மீண்டும் இது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இனி தன்னுடன் ஒன்றாக வேலைக்கு வர வேண்டாம் என கல்யாண சுந்தரம் கூறியதால் மனைவி ஆத்திரத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த போது கணவரின் கழுத்தை மனைவி கத்தியால் அறுத்துக் கொலை செய்துள்ளார். ஆனால் குடும்ப பிரச்சனை காரணமாக கணவரே கழுத்தை அறுத்துக் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கல்யாண சுந்தரம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். husband murder... wife arrest

அதன் பின்னர் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். இதனையடுத்து கணவரை கொலை செய்து மனைவி தற்கொலை என்று நாடகமாடியது அம்பலமானது. பின்னர் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios