Asianet News TamilAsianet News Tamil

கணவனை எரித்து கொன்ற மனைவி... அடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்ததால் ஆத்திரம்!

அடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்ததால், ஆத்திரம் தாங்காத மனைவி, கணவனை கொலை செய்து எரித்தார். இச்சம்பவம் விருதுநகர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Husband murder...wife arrest
Author
Tamil Nadu, First Published Nov 13, 2018, 5:22 PM IST

அடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்ததால், ஆத்திரம் தாங்காத மனைவி, கணவனை கொலை செய்து எரித்தார். இச்சம்பவம் விருதுநகர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன். கூலி தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். அதில் 2 மகள்களுக்கு திருமணமாகி, அதே ஊரில் உள்ள கணவன் வீட்டில் வசிக்கின்றனர். Husband murder...wife arrest

இந்நிலையில் இன்று அதிகாலையில், வீரபத்திரன் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ஆண் சடலம் எரிந்த நிலையில் கிடந்தது. அதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில், சடலமாக எரிந்த நிலையில் கிடந்தது வீரபத்திரன் என தெரிந்தது. இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 

அப்போது மகாலட்சுமி முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து சென்று தீவிரமாக விசாரித்தனர். அதில், வீரபத்திரன் அடிக்கடி மகாலட்சுமியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். திருமணமான 2 மகள்களும், அடுத்து திருமணம் செய்ய 2 மகள்களும் உள்ள நிலையில், வேண்டாம் என மகாலட்சுமி தடுத்துள்ளார். ஆனாலும் அவர் விடவில்லை.

இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் வீரபத்திரன், மனைவியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். இதனால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் தூங்கிவிட்டார். நள்ளிரவில் வீரபத்திரன் தூங்கி கொண்டிருந்தபோது, அவர் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றிய மகலாட்சுமி, தீ வைத்து எரித்து கொன்றார். Husband murder...wife arrest

பின்னர் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என நினைத்து, அருகில் உள்ள தோட்டத்தில் சடலத்தை வீசினார் என வாக்குமூலத்தில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், அவரை கைது செய்தனர். உல்லாசத்துக்கு அழைத்த கணவனை, மனைவி எரித்து கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios