குடிபோதையில் காதல் மனைவியை தினமும் கதறவிட்ட கணவன்.. வலி தாங்க முடியாமல் அடித்துக்கொன்ற அரசு பள்ளி ஆசிரியை.!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி கிராமத்தை சேர்ந்த சித்தன் மகன் மணிகண்டன் (35). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பொன்னாரம்பட்டி பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான இளமதியை (30) பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
சேலம் அருகே தினமும் குடிபோதையில் வந்து காதல் மனைவியை அடித்து துன்புறுத்தி தகராறு செய்த கணவரை உருட்டுக் கட்டையால் கொடூரமாக அடித்து கொலை செய்த அரசு பள்ளி ஆசிரியையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி கிராமத்தை சேர்ந்த சித்தன் மகன் மணிகண்டன் (35). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பொன்னாரம்பட்டி பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான இளமதியை (30) பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தக்சிந்த்(10) என்ற மகனும், அக்சிதா (6) என்ற மகளும் உள்ளனர்.
பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மணிகண்டன் கொரோனா காரணமாக வேலைக்கு செல்லாமல் குடிபழக்கத்திற்கு அடிமையானர். இதனால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன் மீண்டும் மனைவி இளமதியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அடித்து துன்புறுத்தியதாாகவும் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த மனைவி இளமதி வீட்டில் இருந்த உருட்டு கட்டையால் கணவனை சராமாரி தாக்கியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக காதல் திருமணம் செய்த இளமதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.