Asianet News TamilAsianet News Tamil

நடத்தையில் சந்தேகம்... மனைவி, குழந்தை கழுத்தை அறுத்துக் கொன்று தற்கொலைக்கு முயன்ற சந்தேகப்பிராணி..!

நாமக்கல் அருகே மனைவி மற்றும் குழந்தையைக் கொலை செய்து விட்டு கணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

husband killed wife and Son
Author
Tamil Nadu, First Published Jun 10, 2019, 5:05 PM IST

நாமக்கல் அருகே மனைவி மற்றும் குழந்தையைக் கொலை செய்து விட்டு கணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி எடுத்த மாணிக்கவேலூர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சுரேஷ். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த கெளரி என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு 2 வயதில் புகழ்வின் என்ற மகன் உள்ளார். husband killed wife and Son

இந்நிலையில் சுரேஷ் நேற்று மாலை தனது மனைவி கெளரி, ஒன்றரை வயது மகன் புகழ்வன் ஆகியோருடன் தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது தனது மனைவி மற்றும் மகனை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டார். பின்னர் தானும் கழுத்தை அறுத்துக் கொண்டார். இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 husband killed wife and Son

இதில் கௌரி மற்றும் புகழ்வின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுரேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் லாரி ஓட்டுநர் சுரேஷ் தனது மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் காரணமாக தனது மனைவியையும், மகளையும் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios