அந்தரங்க உறுப்பில் சிகரெட் சூடு.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர கணவன்.!
கணவரும், அவரது 4 நண்பர்களும் சேர்ந்து, அந்த பெண்ணை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரது உடலில் அந்தரங்க உறுப்பு பல்வேறு இடங்களில் சிகரெட்டால் சூடு வைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.
மனைவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கணவர் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தினர்.
மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த ஒருவரை, சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பெண் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணை 2019ல் ஷிப்ரா போலீஸ் நிலைய எல்லையில் உள்ள பண்ணை வீட்டிற்கு கணவர் அழைத்து சென்றார்.
அங்கு கணவரும், அவரது 4 நண்பர்களும் சேர்ந்து, அந்த பெண்ணை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரது உடலில் அந்தரங்க உறுப்பு பல்வேறு இடங்களில் சிகரெட்டால் சூடு வைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், அந்த கும்பலில் இருந்து தப்பித்த அந்த பெண் தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.