Asianet News TamilAsianet News Tamil

உல்லாசத்து வர மறுத்த மனைவி.. குடிபோதையில் கணவர் செய்த பகீர் சம்பவம்..!

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கலில்(55). பாக்கு மட்டை தட்டுகள் விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெரினா(45). இவர் மீன் வறுவல் கடை வைத்து நடத்தி வந்தார். இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கலிலுக்கு குடிபழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால், அடிக்கடி குடித்துவிட்டு வந்து ஜெரினா மற்றும் குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்தார். 

husband arrested for stabbing wife
Author
Dharmapuri, First Published Oct 5, 2021, 6:40 PM IST

உல்லாசத்துக்கு வர மறுத்த மனைவியை தாலி கட்டிய கணவரே கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கலில்(55). பாக்கு மட்டை தட்டுகள் விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெரினா(45). இவர் மீன் வறுவல் கடை வைத்து நடத்தி வந்தார். இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கலிலுக்கு குடிபழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால், அடிக்கடி குடித்துவிட்டு வந்து ஜெரினா மற்றும் குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்தார். 

husband arrested for stabbing wife

இந்நிலையில், நேற்று இரவு போதையடிலட வீட்டிற்கு வந்த கலில் மனைவியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். ஆனால், ஜெரினா வர மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில், ஆத்திரமடைந்த கலில் அருகே இருந்த கத்தியால் ஜெரினாவை சரமாரியாக குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜெரினா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

husband arrested for stabbing wife

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ஜெரினா கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜெரினா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, கொலை செய்த கலிலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உல்லாசத்துக்கு வர மறுத்த மனைவியை கணவன் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios