Asianet News TamilAsianet News Tamil

ஜோலார்பேட்டையில் ஜோராக நடந்த விபச்சாரம்.. உல்லாசமாக இருந்த 6 பேரை கையும், களவுமாக பிடித்த போலீஸ்.!

 ஜோலார்பேட்டை அடுத்து பால்நாங்குப்பம் பகுதியில் வாடகைக்கு தனியாக வீடு எடுத்து பாலியல் தொழில் நடந்து வருவதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். 

House renting prostitution in Jolarpet
Author
Vellore, First Published Mar 21, 2022, 11:54 AM IST

ஜோலார்பேட்டை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து அழகிகளுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்து பால்நாங்குப்பம் பகுதியில் வாடகைக்கு தனியாக வீடு எடுத்து பாலியல் தொழில் நடந்து வருவதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் இருவரும் இணைந்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது.

House renting prostitution in Jolarpet

அங்கு வாடிக்கையாளராக 4 ஆண்களும், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 2 பெண்களும் இருந்தனர். மொத்தம் 8 பேரை  காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், 3 மாதங்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் பாலியல் தொழில் நடத்துவதற்காக வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டு கடந்த இரண்டு தினங்களாக பாலியல் தொழில் நடைபெற்று வந்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

House renting prostitution in Jolarpet

அது மட்டுமல்லாது பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர்கள் பல்வேறு பகுதிகளில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வீடுகளை மாற்றி பல்வேறு பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பெண்கள் குடும்ப வறுமையின் காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, 3 பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர். மற்றவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios