Asianet News TamilAsianet News Tamil

3 பிள்ளைகள் இருந்தும் அடங்கல.. கள்ளக் காதலனுடன் ஓயாத உல்லாசம்.. கணவனை தீர்த்துக் கட்டிய கொடூரம்.

காதலுக்கு தடையாக இருந்த கணவனை கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெண் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

have 3 children yet no dignity.. Incessant flirtation with illegal lover .. husband Killed By Wife
Author
Delhi, First Published May 28, 2022, 6:01 PM IST

காதலுக்கு தடையாக இருந்த கணவனை கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெண் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலையில் தொடர்புடைய மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். இக் கொடூர சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.

சமீபகாலமாக கள்ளக்காதல் மற்றும் அதை சார்ந்த கொலை, தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கள்ளக்காதல், அதாவது திருமணத்தை மீறிய உறவு குற்றமாகாது என நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை காணமுடிகிறது.

have 3 children yet no dignity.. Incessant flirtation with illegal lover .. husband Killed By Wife

இந்த வரிசையில் டெல்லியில் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை அடித்துக்கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லி எல் தர்யாகஞ்சி  பகுதியை சேர்ந்தவர் மொய்தீன் குரேஷி, இவரது மனைவி ஜிபா,  இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன்  உள்ளனர். மொய்தீன் குரேஷி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர்களுக்குள் சண்டை உச்சக்கட்டத்தை எட்டியது. இந்நிலையில்தான்  ஜிபாவுக்கு சோயப் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது, அவர்கள் இருவரும் சமூக வலைதளத்தின் மூலம் பேசி வந்தனர். பின்னர் இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து வந்தனர். இது ஒரு கட்டத்தில் கள்ளக்காதலாக மாறியது,  ஜிபாவும் சோயபும் அடிக்கடி திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்தனர். தனது கணவனுக்கு தெரிந்தால் பெரிய பிரச்சினையாகி விடும் என அஞ்சிய  ஜிபா தனது கணவனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொல்ல பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, மொய்தீன்கான் அவைகளில் இருத்து தப்பி வந்தார், இந்நிலையில் உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த கோஸ்வாமி என்ற கூலிப்படை கொலையாளியை சந்நித்த சோயப், மொய்தீன்கானை தீர்த்துக் கட்ட  நியமித்தார். அதற்காக உ.பியில் ஒரு பைக் திருடப்பட்டது.

கொலை செய்ய 6 லட்சம் ரூபாய் வரை தொகை பேசப்பட்டது, இந்நிலையில் மே 17 ஆம் தேதி நள்ளிரவில் மொய்தீன்கான் சிறுநீர் கழிப்பதற்காக வீட்டிற்கு வெளியே வந்தார், அங்கு ஏற்கனவே கூலிப்படை கும்பல் அவரின் வீட்டு வாசலில் காத்திருந்தது. அப்போது மொய்தீன் கால் வெளியே வந்தவுடன் அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர், உடனே அந்த கும்பல் அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றது, விடியற்காலையில் மைதீன்கான் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது விசாரணை நடத்தியதில் மனைவிக்கு இளைஞர் ஒருவருடன் தவறான உறவு இருந்தது தெரியவந்தது.

have 3 children yet no dignity.. Incessant flirtation with illegal lover .. husband Killed By Wife

பின்னர் ஜிபாவை காவலில் வைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது தான் தனது கணவன் எங்கு போகிறார் வருகிறார் என்ற தகவலை தனது கள்ளக்காதலனுக்கு தெரிவித்ததாகவும், அதனடிப்படையில் கணவனை அவர்கள் பின்தொடர்ந்து கொலை செய்ததாகவும் ஜிபா ஒப்புக் கொண்டார். அனைவரும் சேர்ந்து இந்த கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் தர்யாகஞ்ச்  பகுதியில் அவர்கள் கொலைக்காக பயன்படுத்திய பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். ஜிபா அளித்த தகவலின்படி கள்ளக்காதலன் சோயப் மற்றும் கூலிப்படை கொலையாளி கோஸ்வாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios