கடந்த 2 ஆண்டுகளாக இந்த பாலியல் விவகாரம் தொடர்ந்து நடந்திருக்கிறது. ஆசிரியையின் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் அவர் மாணவர்களுடன் உல்லாசமாக உள்ள 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள், படங்கள் உள்ளன. அவரது லேப்டாப்பில் உள்ள படங்கள், வீடியோ பதிவுகளை ஆதாரமாக கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.

மதுரை 45 வயது ஆசிரியை கள்ளக்காதலுடன் சேர்ந்து வாங்க பழகலாம் என்ற பெயரில் முகநூலில் குரூப் ஆரம்பித்து அதில் மாணவர்களுடன் ஆசிரியை உல்லாசமாக உள்ள வீடியோக்களை போட்டு லிங்க் கொடுத்து பணம் பறித்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. 

அரசு பள்ளி ஆசிரியை 

மதுரை பெத்தானியாபுரம் பகுதியை 45 வயது மதிக்கத்தக்க ஆசிரியை ஒருவர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், தனது மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில், தனக்கன்குளம் பகுதியை சேர்ந்த வீரமணிக்கும், அந்த ஆசிரியைக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவருக்கும் இடையே இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

ஆபாச படம்

இதற்கிடையே, ஆபாச படங்களை அதிகம் பார்க்கும் அந்த ஆசிரியைக்கும், அதில் வரும் காட்சிகள் போன்று செய்ய ஆசை வந்தது. அதன் காரணமாக, டியூசன் படிக்க தன்னிடம் வந்த மாணவர்களுடன் அவர் உல்லாசம் அனுபவித்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக வீடியோ பரப்பிய கள்ளக்காதலன் மற்றும் அரசு பள்ளி ஆசிரியை ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வீரமணி செல்போனில் சிறுவர்கள், ஒரு பெண்ணுடன் கூட்டாக உல்லாசமாக இருக்கும் 10க்கும் மேற்பட்ட வீடியோ பதிவுகள் இருந்தன. மேலும் 100க்கும் மேற்பட்ட போட்டோக்களும் இருந்தன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

வாங்க பழகலாம்’என்று வசூல்

இது தொடர்பாக மகளிர் போலீசார் கூறுகையில், ‘‘கடந்த 2 ஆண்டுகளாக இந்த பாலியல் விவகாரம் தொடர்ந்து நடந்திருக்கிறது. ஆசிரியையின் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் அவர் மாணவர்களுடன் உல்லாசமாக உள்ள 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள், படங்கள் உள்ளன. அவரது லேப்டாப்பில் உள்ள படங்கள், வீடியோ பதிவுகளை ஆதாரமாக கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். ஆசிரியை மேலும் சில மாணவர்களை சீரழித்துள்ளார் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் ‘வாங்க பழகலாம்’ என்ற பெயரில் முகநூலில் குரூப் ஆரம்பித்துள்ளனர்.

அதில் மாணவர்களுடன் ஆசிரியை உல்லாசமாக உள்ள வீடியோக்களை போட்டு லிங்க் கொடுத்துள்ளனர். வீரமணி அல்லது ஆசிரியையின் வங்கிக் கணக்குக்கு பணம் செலுத்தினால் மட்டுமே அந்த லிங்க் ஓபன் ஆகும். இதன் மூலம் ஆசிரியையின் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பணம் சேர்ந்துள்ளது. தோண்டத் தோண்ட ஏராளமான விவகாரங்கள் வெளியாவதால் ஆசிரியை மற்றும் அவரது கள்ளக்காதலன் வீரமணியை நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம்’’ என்றனர்.

பணியிடை நீக்கம்

இது ஒருபுறம் இருக்க, டியூசன் படிக்க வந்த பள்ளி மாணவர்களுடன் உல்லாசம் அனுபவித்த அரசு பள்ளி ஆசிரியையை, பணியிடை நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.