தனியாக வசித்து வந்த கவர்மெண்ட் நர்ஸ்.. ரத்த வெள்ளத்தில் படுகொலை.. நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறிய கணவர்..!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (44). இவர் திண்டுக்கல்லில் தங்கி கேட்டரிங் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (43). இவர் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் கடந்த 17 ஆண்டுகளாக செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷ் தனது மனைவியை பிரிந்து குழந்தைகளுடன் திண்டுக்கல்லில் தனியாக வசித்து வருகிறார்.
ஆண்டிபட்டி அருகே அரசு மருத்துவமனை செவிலியர் கொடூரமாக முறையில் ரத்த வெள்ளத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (44). இவர் திண்டுக்கல்லில் தங்கி கேட்டரிங் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (43). இவர் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் கடந்த 17 ஆண்டுகளாக செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷ் தனது மனைவியை பிரிந்து குழந்தைகளுடன் திண்டுக்கல்லில் தனியாக வசித்து வருகிறார்.
அதேபோல், ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் பகுதியில் செல்வி தனியாக வசித்து வந்தார். அப்படி இருந்த போதிலும் கணவன்-மனைவி 2 பேரும் தனது குழந்தைகள் குறித்து செல்போனில் பேசிக்கொண்டு வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு சுரேஷ் அவரது மனைவி செல்விக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக செல்போன் சுவிட்ச்ஆப் ஆன நிலையில் இருந்தது. இதனையடுத்து அவரது உறவினர்களிடம் தெரிவித்து வீட்டிற்கு சென்று செல்வியை பார்த்து வருமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து, வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு பூட்டி இருந்தது. பின்னர், ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது செல்வி ரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்ற கொடூரமான முறையில் உயிரிழந்து கிடந்தார். தனது மனைவி இறப்பு குறித்து சுரேசிடம் தெரிவிக்கவே அவர் அலறி துடித்து குழந்தைகளுடன் ஓடி வந்தார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.