Asianet News TamilAsianet News Tamil

ஆண்களுடன் உறவு, எவ்வளவு சொல்லியும் கேட்காத காதலி... அபார்ட்மெண்ட்டுக்கு தனியாக வரவழைத்த காதலன்!! கோபத்தில் வெறி தீர செய்த சம்பவம்

தெற்கு உக்ரேனில் ஜப்ரோசியா நகரத்தில் அனஸ்தேஸியா என்ற பெண், விட்டாலி சைக்கோஸ்வ்சை என்ற நபரை காதலித்து வந்தார். இருவருக்கும் பெற்றோர் ஆசியுடன் சமீபத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. தனது காதலி மீது தொடக்கத்திலிருந்தே காதலன் விட்டாலிக்கு சந்தேகம் இருந்தது. இதற்கு முழு காரணம் அனஸ்தேஸியா வேறு ஆண்களுடன் பேசுவதை காதலன் விட்டாலிக்கு விருப்பமில்லை இந்த பொறாமையால், அழகான  இளம் பெண்ணை எரித்து கொலை செய்துள்ளார் காதலன் விட்டாலி. 

girl dies after doused petrol and set by boyfriend
Author
Indonesia, First Published Jul 13, 2019, 4:38 PM IST

தெற்கு உக்ரேனில் ஜப்ரோசியா நகரத்தில் அனஸ்தேஸியா என்ற பெண், விட்டாலி சைக்கோஸ்வ்சை என்ற நபரை காதலித்து வந்தார். இருவருக்கும் பெற்றோர் ஆசியுடன் சமீபத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. தனது காதலி மீது தொடக்கத்திலிருந்தே காதலன் விட்டாலிக்கு சந்தேகம் இருந்தது. இதற்கு முழு காரணம் அனஸ்தேஸியா வேறு ஆண்களுடன் பேசுவதை காதலன் விட்டாலிக்கு விருப்பமில்லை இந்த பொறாமையால், அழகான  இளம் பெண்ணை எரித்து கொலை செய்துள்ளார் காதலன் விட்டாலி. 

இளம் பெண் அனஸ்தேஸியாவுக்கு ஆண் நண்பர்கள் அதிகம் என்பதால் அவர், தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பார். பொறுத்து பார்த்த காதலன் விட்டாலி, கடந்த ஜூலை 2ஆம் தேதி அனஸ்தேஸியாவை ஒரு அபார்ட்மெண்டிற்கு வரவழைத்த காதலன் விட்டாலியுடன் . பேசிப்பார்த்தார். ஆனால் அனஸ்தேஸியா தனது வருங்கால கணவர் விட்டாலியை சமாதானம் செய்ய முயன்றார். 

பேசிக்கொண்டிருக்கும் போதே கோபத்தோடு அபார்ட்மெண்ட்டை விட்டு வெளியே வந்த விட்டாலி கோபத்தோடு வெளியே போய் பெட்ரோல் பங்கில் ஒரு லிட்டர் பெட்ரோலை பாட்டிலில் வாங்கினார். அனஸ்தேஸியா இருந்த அபார்ட்மெண்ட்டிற்கு மீண்டும் வந்த விட்டாலி, அனஸ்தேஸியா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் அனஸ்தேஸியா உடல் முழுவதும் எரிந்தது. தன்னை காப்பாற்றுங்கள் என்று கத்தி கதறினார். இந்த சம்பவத்தைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். போலீசிற்கு தகவல் அளித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கருகிய நிலையில் இருந்த அனஸ்தேஸியாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அனஸ்தேஸியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். 

பெட்ரோல் நாற்றத்துடன் கையில் காயங்களுடன் இருந்த கொடூரமான காதலன் விட்டாலியை கைது செய்தனர். காதலியை எரித்தது ஏன் என்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்த விட்டாலி, தான் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் பிற ஆண்களுடன் பேசுவதை அவள் நிறுத்திக்கொள்ளாததால்  கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்டுள்ளார்.   

Follow Us:
Download App:
  • android
  • ios