Asianet News TamilAsianet News Tamil

முன்னாள் அதிமுக எம்.பி. மனைவி படுகொலை..! பெற்ற மகன் வெறிச்செயல்..!

அதிமுக முன்னாள் எம்.பி. குழந்தைவேலுவின் மனைவி, பெற்ற மகனால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Former AIADMK MP Wife murder
Author
Tamil Nadu, First Published Apr 15, 2019, 10:28 AM IST

அதிமுக முன்னாள் எம்.பி. குழந்தைவேலுவின் மனைவி, பெற்ற மகனால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பெசன்ட் நகர், 6-வது அவென்யூவை சேர்ந்தவர் அதிமுக முன்னாள் எம்.பி. குழந்தைவேலு. இவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனையடுத்து மனைவி ரத்தினம் தனியாக வசித்து வந்தார். மகன் பிரவீன் இங்கிலாந்து படித்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன் சென்னை வந்த இவர் தனது தாய் ரத்தினத்திடம் சொத்து கேட்டு தகராறு ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. Former AIADMK MP Wife murder

இந்நிலையில் நேற்றிரவு ரத்தினத்தின் வீடு உள்பக்கமாக கதவு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவரது உறவினர் ஒருவர் ஜன்னலில் சென்று பார்த்த போது, ரத்தினம் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே நுழைந்த போலீசார் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மார்பில் கத்தியால் குத்தப்பட்டு ரத்தம் வெள்ளத்தில் ரத்தினம் இறந்து கிடந்தார். Former AIADMK MP Wife murder

இதனையடுத்து ரத்தினத்தின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சொத்து தகராறு காரணமாக பெற்ற மகனே தாயை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து தலைமறைவாக உள்ள பிரவீணை போலீசார் தேடி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios