இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆறுமுகம் உயிர் பயத்தில் அவர்களிடம் இருந்து தப்பிக்க வண்டியை அங்கேயே போட்டு விட்டு சாலையில் ஓடினார். ஆனால், மர்ம கும்பல் ஆறுமுகத்தை விடாமல் பட்டப்பகலில் நடுரோட்டில் விரட்டி சென்று சரமாரியாக வெட்டியது. இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இந்த காட்சிகளை பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். 

சென்னையில் பட்டப்பகலில் பைனான்சியரை 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

சென்னை சேத்துப்பட்டு, வைத்தியநாதன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (36). பைனான்சியர் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் அண்ணாநகரில் உள்ள தனது அலுவலகத்துக்கு ஆறுமுகம் அவரது நண்பர் ரமேஷுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தனர். அமைந்தகரை அடுத்த செனாய் நகர் அருகே வந்த போது இருசக்கர வாகனத்தில் வந்தத 6 பேர் கொண்ட பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆறுமுகம் உயிர் பயத்தில் அவர்களிடம் இருந்து தப்பிக்க வண்டியை அங்கேயே போட்டு விட்டு சாலையில் ஓடினார். ஆனால், மர்ம கும்பல் ஆறுமுகத்தை விடாமல் பட்டப்பகலில் நடுரோட்டில் விரட்டி சென்று சரமாரியாக வெட்டியது. இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இந்த காட்சிகளை பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். 

பின்னர், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், ஆறுமுகத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். தகவல் அறிந்து சம்பவ இடத்தததிற்கு விரைந்த போலீசார் ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பைனான்சியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.