Asianet News TamilAsianet News Tamil

கண்டதுமே காதல்.. பைனான்சியர் மனைவியை கரெக்ட் செய்து உல்லாசமாக இருந்த முருகன்.. கள்ளக்காதலன் பகீர் வாக்குமூலம்

வட்டிக்கு பணம் வாங்கியிருந்த முருகன், வட்டி பணத்தை கொடுப்பதற்காக அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்த போது, அன்னப்பிரியாவுடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் இல்லாத நேரத்தில் முருகனை வீட்டிற்கு வரவழைத்து அவருடன் அன்னப்பிரியா உல்லாசமாக இருந்துள்ளார். 

Financier murder...women Arrest in salem
Author
Salem, First Published Oct 12, 2021, 1:26 PM IST

அதிகாலை வேளையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த கணவரை கட்டியால் அடித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். 

சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே தேவூர் புள்ளாக்கவுண்டப்பட்டி 4வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் தயானந்த்(30). இவர், பைனான்ஸ் நிறுவனம் மற்றும் டிராவல்ஸ் நடத்தி வந்தார். இவரது மனைவி அன்னப்பிரியா(21). இவர்களுக்கு 3 ஆண்டுக்கு முன்பு திருமணமாகி, 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை, தயானந்த் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது தயானந்த் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். 

Financier murder...women Arrest in salem

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தயானந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவரது மனைவியிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதனிடையே, தயானந்தின் தாய் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் மனு அளித்தார். 

இந்நிலையில், போலீசார் அன்னப்பிரியாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். மேலும், அன்னப்பிரியாவின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை வைத்தும் தீவிர விசாரணை நடத்தினர். இதில், அடிக்கடி ஒரு ஆண் நண்பருடன் பேசியது தெரியவந்தது. இதுதொடர்பாக முருகன்(21) என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில், தயானந்திடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்த முருகன், வட்டி பணத்தை கொடுப்பதற்காக அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்த போது, அன்னப்பிரியாவுடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் இல்லாத நேரத்தில் முருகனை வீட்டிற்கு வரவழைத்து அவருடன் அன்னப்பிரியா உல்லாசமாக இருந்துள்ளார். 

Financier murder...women Arrest in salem

இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததையடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததையடுத்து கணவரை போட்டு தள்ள முடிவு செய்தார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு தயானந்த் தூங்கியதும், அன்னப்பிரியா செல்போனில் தொடர்பு கொண்டு, முருகனை வரவழைத்தார்.  அதிகாலை வேளையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த தயானந்தை கட்டையால் தாக்கிய போது அலறியுள்ளார். ஆனாலும், சரமாரியாக அடிக்கவே தயானந்த் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். பின்னர், மரக்கட்டிலில் மோதி உயிரிழந்துவிட்டதாக நாடகமாடியது அம்பலமானது. இதனையடுத்து, இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios