Asianet News TamilAsianet News Tamil

பெண் போலீசை எரித்து கொன்ற சக போலீஸ்... ஓட ஓட விரட்டி குத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரம்!!

நேற்று வேலை  முடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்த  பெண் காவலர் மீது ஆன் காவலர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

Female cop dies after being set on fire by policeman in Alappuzha district
Author
Alappuzha, First Published Jun 16, 2019, 11:03 AM IST

நேற்று வேலை  முடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்த  பெண் காவலர் மீது ஆன் காவலர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வந்தவர் சௌமியா மற்றும் புஷ்கரன் இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது இவரது கணவர் புஷ்கரன் அரபு நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சுமார் 4.30 மணி அளவில் இவர் வேலை முடித்து தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

Female cop dies after being set on fire by policeman in Alappuzha district

அப்போது எர்ணாகுளம் மாவட்டம் அவுலா காவல்நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றும் அஜாஸ் என்பவர் தனது காரால் சௌமியாவின் இருசக்கர வாகனத்தின்  மீது மோதியுள்ளார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த சௌமியாவை காரிலிருந்து கத்தியுடன் இறங்கிய அஜாஸ் அவரை சரமாரியாக குத்தியுள்ளார். நிலைதடுமாறிய சௌமியா அப்போது தப்பியோட முயற்சித்த போதும் மீண்டும் விடாமல் விரட்டிச் சென்று சௌமியாவை பலமுறை கத்தியால் குத்தியுள்ளார் அஜாஸ்.

Female cop dies after being set on fire by policeman in Alappuzha district

அதன் பின்னும் ஆத்திரம் அடங்காத அஜாஸ் காரில் கேனில் வைத்திருந்த  பெட்ரோலை   எடுத்து வந்து சௌமியாவின்  மீது ஊற்றி தீ வைத்ததாக வைத்துள்ளார். அப்போது பெட்ரோல் தன்மீதும் பெட்ரோல் லேசாக பட்டதால் அஜாஸ் மீதும் தீ பற்றியது. ஆடையில் தீப்பற்றி நிலையில் அங்கும் இங்கும் ஓடி இறுதியில் ஆடைகளை களைந்து உயிர் தப்பினார். அவரை  மடக்கிப்பிடித்த அக்கம்பக்கத்தினர் செம அடி கொடுத்து கட்டி வைத்துள்ளனர் வைத்தனர். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து படுகாயங்களுடன் இருந்த காவலர் அஜாஸை மீட்டனர்.

Female cop dies after being set on fire by policeman in Alappuzha district

அவரது உடலில் தீக்காயங்கள் இருப்பதால் அவரை ஆலப்புழை மாவட்டம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

Female cop dies after being set on fire by policeman in Alappuzha district

இதற்கிடையே எரிந்த நிலையில் கிடந்த பெண் காவலரின் சடலத்தை மீட்டு பிரேதப பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் எர்ணாகுளத்தில் பணியாற்றும் காவலர் அஜாஸ்க்கும்  ஆலப்புழையில் பணியாற்றும் பெண் காவலருக்கும் எப்படி பழக்கம் உருவானது? இந்தக் கொலைக்கான பின்னணி என்ன? எதற்காக சௌமியாவை கொலை செய்தார்? என  போலீசார் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios