Asianet News TamilAsianet News Tamil

வீட்டில் தனியே இருந்த மருமகளை கதவை சாத்திவிட்டு கற்பழித்த மாமனார் ...கிருஷ்ணகிரியில் பரபரப்பு!!

மருமகளை மாமனார் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து, கற்பழித்துள்ளதால் செய்த கொடுமை மருமகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

father in law abacus his daughter in law
Author
Chennai, First Published May 16, 2019, 4:38 PM IST

மருமகளை மாமனார் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து, கற்பழித்துள்ளதால் செய்த கொடுமை மருமகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சந்தியா-கண்ணன் என்ற தம்பதிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமண முடிந்து, இரண்டு குழந்தைகள் உள்ளது. அந்த சூழலில் கண்ணனின் மனைவி சந்தியாவிடம், அவரது மாமனார் முருகன் தவறாக பார்ப்பதும், அடிக்கடி செக்ஸ் செல்மிஷம் செய்வதும்,  தவறாக நடந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சந்தியா தனது கணவர் மற்றும் மாமியாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் மாமியாரோ இது எல்லாம் சகஜம் என சொல்லி அனுசரிக்குமாறு மழுப்பலாக பேசி தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த மருமகள் சந்தியா, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில், நாகரசம்பட்டி காவல் நிலையத்திலும் மாமனார் மீது செக்ஸ் புகார் அளித்துள்ளார். ஆனால் அப்புகார்களின் மீது போலீசார் விசாரணை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் வீட்டில் தனியே இருந்த மருமகள் சந்தியாவை மாமனார் முருகன் கற்பழித்ததாகவும், இது தொடர்பாக  பஞ்சாயத்தில் புகார் அளித்ததாகவும், அதற்க்கு ஊரில் உள்ளவர்கள் அலட்சியமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த வேதனை அடைந்த சந்தியா, தனது தந்தை வீட்டிற்கு வந்து, மாமனார் முருகன் தன்னை கற்பழித்ததை சொல்லிவிட்டு அழுதுள்ளார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத போது கதவை பூட்டிக்கொண்டு  விஷத்தை அருந்தி சந்தியா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வெளியிலிருந்து வந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சந்தியாவை அழைத்து சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சந்தியா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைதொடர்ந்து சந்தியாவின் பெற்றோர் நடந்த சம்பவத்தை கொண்டு சந்தியாவின் கணவர், மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios