ஐயோ என்னை கொல்ல வராங்க காப்பாத்துங்க.. ரவுடியை சல்லி சல்லியாய் வெட்டி சாய்த்த கும்பல்..!
புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகன் பிரவீன் (19). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.
புதுச்சேரியில் பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகன் பிரவீன் (19). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு அரியாங்குப்பம் சுப்பையா நகரில் ஜிம் பாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவனுக்கு தொடர்பு இருந்தது. அப்போது, பிரவீன் சிறுவன் என்பதால் அந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு இருசக்கர வாகனதத்தில் பிரவீன் சென்றுக்கொண்டிருந்த போது ஆர்.கே.நகரில் உள்ள பெரியார் சிலை அருகில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் வழிமறித்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பீரவின் வண்டியை அங்கேயே போட்டுவிட்டு உயிர் பயத்தில் தலைதெறிக்க ஓடினார். ஆனால், அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டினர். இதில், தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டுபட்டு பிரவீன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த கும்பல் சாவகாசமாக சென்றது.
இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜிம் பாண்டியன் கொலைக்கு பழிக்குபழியாக கொலை நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இளைஞர் ஓட ஒட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.