Asianet News TamilAsianet News Tamil

நள்ளிரவில் பயங்கரம்.. தூங்கிய மனைவியை கிரிக்கெட் ஸ்டெம்ப்பால் அடித்து கொலை.. பாம்பு கடித்ததாக நாடகமாடிய கணவர்

நள்ளிரவில் திடுக்கிட்டு எழுந்த ரவிக்குமார் அருகில் இருந்த கிரிக்கெட் ஸ்டெம்ப்பை எடுத்து ஆனந்தியின் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், ஆனந்தி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Family dispute...wife murder
Author
Kanchipuram, First Published Aug 9, 2021, 5:18 PM IST

குடும்ப தகராறு காரணமாக தூங்கிக்கொண்டிருந்த மனைவியை கிரிக்கெட் ஸ்டெம்ப்பால் அடித்து மனைவியை கொலை செய்துவிட்டுபாம்பு கடித்ததாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

மாமல்லபுரம் அடுத்த பையனூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் டெய்லர் (40). இவரது மனைவி ஆனந்தி (31), பையனூரில் உள்ள தனியார் கல்லூரி கேண்டீனில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு தமிழ்ச்செல்வி (16), என்ற மகளும், தமிழ்ச்செல்வன் (14) என்ற மகனும் உள்ளனர். ஆனந்தி, ரவிக்குமாரின் அக்கா மகள் ஆவார். இருவரும் பையனூரை சேர்ந்தவர்கள்.

Family dispute...wife murder

இந்நிலையில், ரவிக்குமார் தினமும் குடித்துவிட்டு, அவரது மனைவி ஆனந்தியிடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல், நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு மது போதையில்  வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்து, அடித்து உதைத்துள்ளார். அப்போது, இவர்களது மகன் தமிழ்ச்செல்வன் தந்தையை தட்டிக் கேட்டு கண்டித்துள்ளார். பின்னர், இருவரும் சமாதானம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அனைவரும் படுத்து உறங்கி விட்டனர். நள்ளிரவில் திடுக்கிட்டு எழுந்த ரவிக்குமார் அருகில் இருந்த கிரிக்கெட் ஸ்டெம்ப்பை எடுத்து ஆனந்தியின் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், ஆனந்தி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Family dispute...wife murder

இதனையடுத்து, மனைவி பாம்பு கிடைத்து இறந்துவிட்டார் என கூறி கணவர் ரவிக்குமார் நாடகமாடியுள்ளார். பின்னர், தனது மகள் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆனந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, போலீசார் ரவிக்குமாரை பிடித்து விசாரணை நடத்தியதில் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios