மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்து ஊழியர் துடிதுடிக்க வெட்டி படுகொலை..ரத்த வெள்ளத்தை பார்த்து அலறிய சக ஊழியர்
தூத்துக்குடியில் மின்வாரிய அலுவலகத்தில் புகுந்து ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் மின்வாரிய அலுவலகத்தில் புகுந்து ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி நகரைச் சேர்ந்தவர் ஆனந்த பாண்டி(51). இவர் நாசரேத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் லைன் மேனாக வேலை செய்துவந்தார். இவர் வழக்கம் போல இரவு பணியில் மின்வாரிய அலுவலகதத்தில் இருந்தார். அப்போத, மின்வாரிய அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, மின்வாரிய அலுவலகத்தை வெளியே பூட்டிவிட்டு அதன் சாவியை வெளியே வைத்துவிட்டு தப்பித்தனர்.
வழக்கம் போல காலையில் பணிக்கு வந்த ஊழியர்கள் அலுவலக வாசலில் ரத்தக்கறை படிந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆபீசின் சாவி அங்குள்ள நுழைவாயில் அருகே இருக்கவே அலுவலகத்தை திறந்து பார்த்த போது அங்கு லைன்மேன் ஆனந்த் பாண்டி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அலறி துடித்தனர்.
இதுதொடர்பாக நாசரேத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆனந்த் பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பிரசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை. முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது சொத்து தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.