Asianet News TamilAsianet News Tamil

சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல்... 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது!!

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.8.66 கோடி மதிப்புடைய போதைப்பொருள், தங்கப்பசை மற்றும் வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டதோடு உகாண்டா, இலங்கையை சோ்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

drugs seized at chennai airport and 6 people arrested including 2 womens
Author
First Published Oct 3, 2022, 9:10 PM IST

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.8.66 கோடி மதிப்புடைய போதைப்பொருள், தங்கப்பசை மற்றும் வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டதோடு உகாண்டா, இலங்கையை சோ்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது, எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்த பயணிகளையும் சுங்கத்துறையினர் சோதனை செய்தனா். அப்போது உகாண்டா நாட்டைச் சேர்ந்த நோலீன் நம்பீரா என்ற பெண்ணிடம் இருந்து இரண்டு  விதமான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 3.2 கிலோ இருந்த அதை சோதனை செய்ததில், அது ஹெராயின் மற்றும் மெத்தோ குயிலோன் என்ற போதைப் பொட்கள் என்றும் அதன் மதிப்பு ரூ.8.3 கோடி என்பதும் தெரியவந்தது.

இதையும் படிங்க: போதையில் தகராறு செய்த கணவனை விஷம் வைத்து கொன்ற பெண்

drugs seized at chennai airport and 6 people arrested including 2 womens

இதை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சென்னை சா்வதேச முனையம் வருகை பகுதி கழிவறையில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றும் சென்னையை சோ்ந்த திருமுருகன் என்பவரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில், அவா் உள்ளாடைக்குள் 524 கிராம் தங்கப்பசை இருந்தது கண்டறியப்பட்டது. அதை பறிமுதல் செய்து விசாரித்த போது, சாா்ஜாவிலிருந்து வந்த விமான பயணி ஒருவா் கொடுத்ததாக கூறியதை அடுத்து அந்த பயணியையும் சுங்கத்துறையினர் கைது செய்தனா். இதேபோல் இலங்கையிலிருந்து சென்னை வந்த விமான பயணிகளை சோதனை செய்ததில் இலங்கையை சோ்ந்த மாலா தமயந்தி என்ற பெண் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 640 கிராம் தங்கப்பசையை கைப்பற்றப்பட்டது.

இதையும் படிங்க: கோவையில் செவிலியரை குத்தி கொலை செய்த கணவன் தற்கொலைக்கு முயற்சி

drugs seized at chennai airport and 6 people arrested including 2 womens

இதை அடுத்து அவர், கைது செய்யப்பட்டார். சென்னையிலிருந்து சாா்ஜா செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளை சுங்கத்துறை சோதனையிட்டனா். அப்போது சென்னையை சோ்ந்த 2 பயணிகள் உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.15.7 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலா் கரன்சிகளை சுங்கத்துறை அதிகாதிகள் பறிமுதல் செய்தனா். சென்னை விமானநிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனைகளில் ரூ.8.66 கோடி மதிப்புடைய போதைப்பொருள், தங்கம், வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டு, உகாண்டா, இலங்கையை சோ்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேரை சுங்கத்துறையினா் கைது செய்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios