Asianet News TamilAsianet News Tamil

கோடிக் கணக்கில் வரதட்சணை.. நண்பர்களை வரவழைத்து புது மனைவி தலையில் சிறுநீர் கழித்து கணவன் அட்டூழியம்.

கோடிக்கணக்கில் மனைவி வரதட்சணை கொண்டு வந்தும் திருப்தி அடையாத கணவன் தனது நண்பர்களை வரவழைத்து மனைவியின் தலையில் சிறுநீர் கழித்து அட்டூழியம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

Dowry in crores..Husband humiliated with new wife along with friends.
Author
Karnataka, First Published Aug 8, 2022, 7:59 PM IST

கோடிக்கணக்கில் மனைவி வரதட்சணை கொண்டு வந்தும் திருப்தி அடையாத கணவன் தனது நண்பர்களை வரவழைத்து மனைவியின் தலையில் சிறுநீர் கழித்து அட்டூழியம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை தடுக்க அரசும் காவல்துறை எத்தனை நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, இந்த வரிசையில் வரதட்சனை வாங்கி வரச் சொல்லி கணவன் மனைவியை கொடுமை படுத்தியுள்ள சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு பசவனகுடி காவல் நிலைய  எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சுதீப், இவருக்கும் ஹைதராபாத்தை சேர்ந்த 28 வயது பெண்ணுக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

Dowry in crores..Husband humiliated with new wife along with friends.

இதையும் படியுங்கள்: உனக்கு என் தங்கச்சி கேட்குதாடா..? காதலனை பீர் பாட்டிலால் குத்தி கிழித்த அண்ணன்.

இரு வீட்டார் சம்மதத்துடன் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. மணமகனின் வீட்டாரின் கோரிக்கையை ஏற்ற பெண்வீட்டார் பலகோடி ரூபாய் செலவு செய்து ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் பிரமாண்டமான முறையில் திருமணம் நடத்தினர். திருமணத்தின் போது சுதீப்புக்கு 55 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் கார், 200 கிலோ வெள்ளி, 4 கிலோ தங்க நகைகள் கோடிக்கணக்கில் பணம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு மேலும் வரதட்சணை வாங்கி வரும்படி மனைவியை சுதீப் தொல்லை கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்: இளம்பெண் மீதான தீராத ஏக்கம்! கம்பு கொல்லையில் வைத்து கதற கதற பலாத்காரம்!வெறி தீராததால் என்ன செய்தார் தெரியுமா?

இதனை அடுத்து அந்தப் பெண்ணின் தந்தை தனக்கு சொந்தமான இரு நிறுவனங்களை மருமகனின் பெயரில் எழுதி வைத்தார், அந்நிறுவனங்களிலிருந்து  வரும் லாபத்தையும் சுதீப் அனுபவித்து வந்தார். ஆனாலும்  சுதீப் அதில் திருப்தி அடையவில்லை, தொடர்ந்து மனைவியை குடித்துவிட்டு அடித்து உதைத்ததுடன், இன்னும் பணம் வாங்கி வரச்சொல்லி துன்புறுத்தி வந்துள்ளார், இருந்ததையெல்லாம் என தந்தை கொடுத்துவிட்டார், இனி வாங்கி வர பணம் இல்லை எனக் கூறியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த கணவன் சுதீப், தனது நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்,

Dowry in crores..Husband humiliated with new wife along with friends.

அவர்களுடன் சேர்ந்து மது அருந்தியதுடன், மனைவியின் தலையில் சிறுநீர் கழித்து அட்டூழியம் செய்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த பெண் மாமியாரிடம் கூறினார், ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை, ஆனால் மருமகள் கொலை மிரட்டல் விடுவதாக மருமகள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து மனமுடைந்து போன அந்தப் பெண் கணவனின் அட்டூழியம் குறித்தும், வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது குறித்தும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios