தூத்துக்குடி மாவட்டம் பாலதண்டாயுதநகரை சேர்ந்தவர் கண்ணன் (48). திமுக பகுதி செயலாளராக இருந்து வருகிறார். தாளமுத்துநகரில் டெய்லர் கடை நடத்தி வந்தார். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவியும், மகாலட்சுமி என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளது.

தூத்துக்குடியில் திமுக பிரமுகர் மர்ம நபர்களால் சரமரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் பாலதண்டாயுதநகரை சேர்ந்தவர் கண்ணன் (48). திமுக பகுதி செயலாளராக இருந்து வருகிறார். தாளமுத்துநகரில் டெய்லர் கடை நடத்தி வந்தார். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவியும், மகாலட்சுமி என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு தாளமுத்து நகரில் உள்ள தனது டெய்லர் கடையை பூட்டி விட்டு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கண்ணனை சரமாரியாக தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த பகுதியில் வாலிபர்கள் சிலர் பெண்களை கேலி செய்ததாக போலீசில் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கும்பல் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.