புதுச்சேரி முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் ஆனந்தி (20). இவர் நர்சிங் படித்து முடித்து விட்டு வேலை கிடைக்காததால் வீட்டில் இருந்து வருகிறார். இவரது உறவினர் மஞ்சினி நகரை சேர்ந்தவர் கோபி. இவர் பெரிய மார்க்கெடடில் பூக்கடை நடத்தி வருகிறார். ஆனந்தி உறவினர் என்பதால் அவரது வீட்டுக்கு கோபி அடிக்கடி சென்று வந்துள்ளார்.  

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ரூம் போட்டு இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

புதுச்சேரி முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் ஆனந்தி (20). இவர் நர்சிங் படித்து முடித்து விட்டு வேலை கிடைக்காததால் வீட்டில் இருந்து வருகிறார். இவரது உறவினர் மஞ்சினி நகரை சேர்ந்தவர் கோபி. இவர் பெரிய மார்க்கெடடில் பூக்கடை நடத்தி வருகிறார். ஆனந்தி உறவினர் என்பதால் அவரது வீட்டுக்கு கோபி அடிக்கடி சென்று வந்துள்ளார். 

இதில், நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. தனிமையில் இருவரும் அடிக்கடி வெளியில் சென்று வந்தனர். இதனையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்தார். இதில், ஆனந்தி 3 மாத கர்ப்பமானார்.

இதையடுத்து ஆனந்தி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கோபியிடம் வற்புறுத்திய போது தனது அண்ணனுக்கு திருமணம் முடிந்த பிறகு பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கோபி கூறிவந்தார். ஆனால், திருமணத்துக்கு முன்பே குழந்தை பிறந்து விட்டால் அவமானமாகி விடுமே என கருதிய ஆனந்தி நேற்று முன்தினம் கோபியின் வீட்டுக்கு சென்று உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு கோபியிடமும் அவரது குடும்பத்தினரிடமும் வற்புறுத்தினார். ஆனால், ஆனந்தியை அவர்கள் அடித்து உதைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் கோபியை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.