Asianet News TamilAsianet News Tamil

கணவரை பிரிந்த மகள்.. வேறு சாதி இளைஞருடன் கள்ளக்காதல்.. துடிதுடிக்க ஆணவக்கொலை செய்த பெற்றோர்.!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நண்டுப்பட்டியை சேர்ந்தவர் தென்னரசு. இவரது மகள்  கவுசல்யாவுக்கும் (23) பரமக்குடி அருகே செவ்வூரை சேர்ந்த கனகராஜ் என்பவருக்கும் 4  ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. 4 மாதங்களுக்கு முன்பு  கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர். இதனையடுத்து, கவுசல்யா நண்டுபட்டியில் உள்ள தந்தை வீட்டில் வசித்து வந்தார். 

daughter honor killing...parents arrested
Author
Ramanathapuram, First Published Oct 19, 2021, 11:15 AM IST

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மகள்  வேறு சமூக இளைஞருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததால் பெற்றோர் ஆணவக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நண்டுப்பட்டியை சேர்ந்தவர் தென்னரசு. இவரது மகள்  கவுசல்யாவுக்கும் (23) பரமக்குடி அருகே செவ்வூரை சேர்ந்த கனகராஜ் என்பவருக்கும் 4  ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. 4 மாதங்களுக்கு முன்பு  கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர். இதனையடுத்து, கவுசல்யா நண்டுபட்டியில் உள்ள தந்தை வீட்டில் வசித்து வந்தார். 

daughter honor killing...parents arrested

இதையும் படிங்க;- தனியாக செல்லும் பெண்களின் அழகான, எடுப்பான மார்பகங்களை தொடும் இளைஞர்.. 100 பேரிடம் சில்மிஷம் செய்தது அம்பலம்.!

இந்நிலையில், கடந்த 16ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கவுசல்யா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து, அவரை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இரண்டு நாள் சிகிச்சை பெற்ற நிலையில், மருத்துவர்களுக்கு தெரியாமல்  பெற்றோர் திடீரென மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

daughter honor killing...parents arrested

இதனால், கவுசல்யா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் கவுசல்யாவின் உடலை பெற்றோர் எரித்துவிட்டனர். தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் எமனேசுவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, கவுசல்யா வேறு சமூக இளைஞருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். ஆனால் அவர் கேட்க மறுத்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர் கழுத்தை நெறுத்தை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, தென்னரசு (58), தாய் அமிர்தவள்ளி (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios