Asianet News TamilAsianet News Tamil

மிஸ்டு கால் கொடுத்த தமிழ், ஆபாச பேச்சில் மயங்கிய ரூபிணி!! தனிமையில் உல்லாசம்... குழந்தைக்கு விஷ பிஸ்கட்!! இளம் பெண்ணின் வாக்குமூலம்

சில நாட்களுக்கு முன்பு சரவணம்பட்டி பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத  பகுதியில் ஒரு முட்புதரில் தமிழும், ரூபினியும் உல்லாசம் அனுபவித்தனர். இந்த நேரத்தில் குழந்தை தேவிஸ்ரீயை கொன்று உடலை கரட்டுமேடு பகுதியில் தூக்கி வீசிவிட்டு தமிழ் தப்பி ஓடிவிட்டார். குழந்தையை காணவில்லை என்று நாடகமாடிய தாய் ரூபினி, போலீசின் தீவிர விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டார்

covai Young woman's confession
Author
Coimbatore, First Published May 30, 2019, 5:38 PM IST

கோவை மாவட்டம் காரமடை வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் ரூபினி . இவருடைய கணவர் பால்ராஜ். கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு தேவிஸ்ரீ என்ற 3 வயது பெண் குழந்தை இருந்தது. கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த தமிழ் என்பவர் ரூபினியின் செல்போனுக்கு மிஸ்டு கால் கொடுத்தார். அந்த எண் யாருடையது என ரூபினி மீண்டும் அழைத்து பேசினார்.

மறுமுனையில் தமிழ் பேசி உள்ளார். எதிர்முனையில் ஒரு பெண் பேசியதை கேட்ட தமிழ் தொடர்ந்து அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேச தொடங்கினார். அப்போதுதான் ரூபினி கணவரை பிரிந்து தனியாக வசிப்பதை தெரிந்து கொண்ட அவர், இதை தனக்கு சாதகமாக்கி கொண்டு ரூபினியிடம் ஆசைவார்த்தை கூறினார்.

தமிழின் ஆபாசம் கலந்த ஆறுதலான  பேச்சில் மயங்கிய ரூபினி, முதலில் நட்பாக பேசி பழகினார். நாளுக்கு நாள்  அவர்களுக்குள் நெருக்கம் அதிகமானது. இந்த நெருக்கம் சில நாட்களில் 2 பேருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் உல்லாசமாக இருக்கும் நேரத்தில், குழந்தை தேவிஸ்ரீ இடையூறாக இருப்பதால்,  கொன்றுவிட வேண்டும் என்று இருவரும் பிளான் போட்டனர். தமிழ் உடனான  உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட, ரூபிணிக்கு தன்னுடைய குழந்தையை கொலை செய்யும் அளவுக்கு காமம் தூண்டியது. 

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சரவணம்பட்டி பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத  பகுதியில் ஒரு முட்புதரில் தமிழும், ரூபினியும் உல்லாசம் அனுபவித்தனர். இந்த நேரத்தில் குழந்தை தேவிஸ்ரீயை கொன்று உடலை கரட்டுமேடு பகுதியில் தூக்கி வீசிவிட்டு தமிழ் தப்பி ஓடிவிட்டார். குழந்தையை காணவில்லை என்று நாடகமாடிய தாய் ரூபினி, போலீசின் தீவிர விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

தாய் ரூபினி போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில், கோவை காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு தான் எனக்கு சொந்த ஊர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அவினாசி அருகே உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலைசெய்தேன். அப்போது அந்த கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்த பால்ராஜுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு, காதலித்து திருமணம் செய்தோம். நான் கர்ப்பமான பிறகு கருத்துவேறுபாடு காரணமாக கணவர் என்னை பிரிந்து சென்றார். அவர் எங்கு சென்றார்? என்று தெரியவில்லை. எனக்கு குழந்தை பிறந்தது. நான் வெள்ளியங்காட்டில் உள்ள பெற்றோருடன் வசித்து வந்தேன். கூலி வேலைக்கும் சென்று வந்தேன்.

ஒருநாள் எனக்கு செல்போனில் மிஸ்டு கால் வந்ததால்,  நான் திரும்ப கால் செய்தேன் அப்போது  கோவில்பாளையத்தை சேர்ந்த தமிழ் என்பவர் பேசினார்.  கணவனால் கைவிடப்பட்ட எனக்கு தமிழின் பேச்சு ஆறுகளாக இருந்தது. அவரும் என்னை கல்யாணம்  செய்து கொள்வதாக சொன்னார். நாங்கள் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்தோம். இந்நிலையில் தேவியை அழைத்துக்கொண்டு வா நாம கோவில்பாளையத்தில் குடும்பத்துடன் வசிக்கலாம் என சொன்னார் தமிழ் .

அப்போது சந்தித்த நாங்கள், எங்களின் காதல் வாழ்க்கைக்கு தேவி இடையூறாக இருப்பாள் என்பதால் தேவியை கொன்றுவிடலாம் என்று சொன்னார் தமிழ். அவர் மீது உள்ள அளவற்ற காதலால் நானும் சம்மதித்தேன். பிறகு அவர் வாங்கி வந்த விஷத்தை டம்பளரில் ஊற்றி, பிஸ்கட் தொட்டு தேவிக்கு கொடுக்க சொன்னார். எனக்கு மனமில்லாததால் தமிழே பிஸ்கட்டை ஊட்டி விட்டார். தேவி ஒரு பிஸ்கட் மட்டும் சாப்பிட்டாள்.  நானும் ஒரு பிஸ்கட்டை விஷத்தில் நனைத்து ஊட்டினேன். சிறிது நேரத்தில் தேவி மயங்கி விழுந்துவிட்டாள்.

பிறகு தேவியை கிரிவல பாதையில் படுக்க வைத்துவிட்டு கோவில் அருகில் சென்று இருவரும் வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது குழந்தையை பார்த்துவிட்டு வருவதாக கூறிச்சென்ற தமிழ், குழந்தை இறந்ததை பார்த்ததும் அங்கிருந்து ஓடிவிட்டார். தமிழ் வருவார் என்று நானும் வெகு நேரம் காத்திருந்தேன். அனால் அவர் வராததால் தேவியை படுக்க வைத்திருந்த இடத்துக்கு சென்றேன். அப்போது அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. என்ன செய்வதென்று புரியாமல் தெரியாமல் அங்கேயே நின்று அழுதேன். நாங்கள் குழந்தையை யாரோ கடத்திச்சென்றுவிட்டதாக நாடகமாட நினைத்திருந்தோம். ஆனால் அதற்குள் நான் போலீஸ் பிடியில் சிக்கிக்கொண்டேன் என இவ்வாறு அவர் கூறினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios