Asianet News TamilAsianet News Tamil

மாணவிகளுக்கு லவ் லெட்டர் கொடுங்கடா.. வகுப்பறையில் பாலியல் பாடம் எடுத்த சில்மிஷ வாத்தியார்.

காதலிக்க வேண்டிய வயதில் காதலிக்க வேண்டும், இது ஒன்றும் தப்பு இல்லை, எல்லாமாணவர்களும் மாணவிகளுக்கு லவ் லெட்டர் கொடுங்க என மாணவர்களை  காதலிக்கத் தூண்டும் வகையில் ஆசிரியர் பேசிவந்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி  அருகே நடந்துள்ளது.

 

Complaint against the teacher for falling in love with the students in Krishnagiri
Author
Krishnagiri, First Published Aug 11, 2022, 1:57 PM IST

காதலிக்க வேண்டிய வயதில் காதலிக்க வேண்டும், இது ஒன்றும் தப்பு இல்லை, எல்லாமாணவர்களும் மாணவிகளுக்கு லவ் லெட்டர் கொடுங்க என மாணவர்களை  காதலிக்கத் தூண்டும் வகையில் ஆசிரியர் பேசிவந்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி  அருகே நடந்துள்ளது.

ஆசிரியர்கள் தாய், தந்தைக்கு அடுத்து சமூகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தெய்வத்திற்கு  நிகராக வைத்து போற்றப்படுகின்றனர், மாணவர்களின் அறியாமை நீக்கி கல்விக்கண் திறப்பவர்கள் ஆசிரியர்கள் என்பதால் சமூகத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து போற்றப்படுகின்றனர். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் சிலநேரங்களில் செய்கிற காரியங்கள் ஆசிரியர் துறைக்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடுகிறது. மாணவர்களுக்கு கல்வி கற்க வேண்டிய நேரத்தில்  காதலிக்க கற்று தந்திருக்கும் சம்பவம் நடந்துள்ளது. 

Complaint against the teacher for falling in love with the students in Krishnagiri

இதையும் படியுங்கள் : என்ன நிர்வாணமா நிக்க வச்சு நகை போட்டு அழகு பாப்பாரு.. சேகர் சேட்டை குறித்து சுவாதி அதிர்ச்சி தகவல்.!

முழு விவரம் பின்வருமாறு:- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அதில் பத்தாம் வகுப்பு ஆசிரியராக ஒருவர் பணியாற்றி வருகிறார், அடுத்த மாதம் அவர் ஓய்வுபெற உள்ள நிலையில் தன்னிடம் படிக்கும் மாணவர்கள் காதலிக்க வேண்டும் என அவர் கூறி வந்துள்ளார். அந்தந்த வயதில் அதையதை செய்துவிட வேண்டும், இது காதலிக்க வேண்டிய வயது. இந்த வயதில் காதலிக்காமல் எப்போது காதலிக்க போகிறீர்கள்? எனவே மாணவிகளுக்கு மாணவர்கள் லவ் லெட்டர் கொடுங்கள் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : ஓடும் ஆட்டோவில் அந்த இடத்தில் கை வைத்து சில்மிஷம்.. அடுத்த நொடியே கீழே குதித்த சிறுமி.. கானா பாடகர் கைது.!

அதுமட்டுமின்றி மாணவிகளின் நடையை ஆபாசமாக வர்ணித்து மாணவர்கள் மத்தியில் உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசி வந்துள்ளார். ஆசிரியரின் இந்த இழிசெயலை பொறுக்கமுடியாமல் ஒரு மாணவன் பெற்றோர்களிடம் புகார் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளியின் தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர்களிடம் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். ஆசிரியரின் செயல்பாடு குறித்து மாணவர்களிடம் விசாரணை நடத்தினர், அதில் மாணவர்கள் ஆசிரியர் வகுப்பறையில் தங்களிடம் என்னவெல்லாம் பேசுவார் என்பது  பற்றி எடுத்துக் கூறினார்.

Complaint against the teacher for falling in love with the students in Krishnagiri

ஆசிரியர் வக்கிர செயல் உறுதியானது. இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் போலீசாரிடம் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் அந்த குறிப்பிட்ட ஆசிரியர் ஓய்வு பெறும் நேரத்தில் தன் மீது புகார் அளித்தால் நிச்சயம் உங்கள் பெயர்களை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என கூறி மிரட்டி வருகிறார். இதனால் அந்த குறிப்பிட்ட ஆசிரியர் இந்த பள்ளிக்கூடத்தில் பணியாற்றக் கூடாது என்றும், அவர் ஓய்வு பெறும் வரை பள்ளிக்கூடத்துக்கு வரக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர். அதற்கு அந்த ஆசிரியரும் ஒப்புக்கொண்டுள்ளார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios