Asianet News TamilAsianet News Tamil

ராமஜெயம் போல் கொலை செய்யப்பட்ட ப.சிதம்பரத்தின் உறவினர் : மைல் கல்லை கட்டி அணையில் வீச்சு

Cinema style Chidambaram relative brutal murder
Cinema style Chidambaram relative brutal murder
Author
First Published Jun 27, 2018, 2:32 PM IST


ராமஜெயம் போல் கொலை செய்தது போல் ப.சிதம்பரத்தின் உறவினர்  சிவமூர்த்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் பேசப்பட்டு வருகின்றன.  முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர்  சிவமூர்த்தி உடல் ஓசூர் கொலவரப்பள்ளி அணை அருகே மீட்கப்பட்டுள்ளது. இவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Cinema style Chidambaram relative brutal murder இவர்களது குடும்பம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.  இந்த கொலை தொடர்பாக  3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி தொழிலை சிவமூர்த்தி செய்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் காணாமல் போய் விட்டார். இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஆம்பூரில் சொகுசு கார் ஒன்று நீண்ட நேரமாக நின்றுகொண்டிருந்தது.  Cinema style Chidambaram relative brutal murder

அதன் அருகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் 3 பேர் நின்றிருந்தனர். அப்போது ஆம்பூர் நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார். அந்த கார் அருகே சென்றபோது அந்த 3 பேரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீஸார் விரட்டி பிடித்தனர். 

Cinema style Chidambaram relative brutal murderஅவர்களை போலீஸார் பாணியில் விசாரித்த போது  பணம் கேட்டு சிவமூர்த்தியை கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடத்தியதாகவும் அவரை கொலை செய்துவிட்டு உடலை எங்கே வீசியெறிவது என்பது குறித்து தெரியாமல் சடலத்துடன் காரில் சுற்றி வந்ததாகவும் இறுதியாக உடலை ஓசூரில் வீசியதாகவும் கூறினர். கைதான 3 பேரும் கோவையை சேர்ந்த மணிபாரதி, விமல், கவுதம் ஆகியோர் என தெரியவந்தது. 

Cinema style Chidambaram relative brutal murder

கல்லு கட்டி சடலம் வீச்சு

சாலையோரம் மைல் கல்லை கட்டி சிவமூர்த்தி உடல் கெலவரப்பள்ளி அணையில் கொடூரமாக வீசப்பட்டுள்ளது. மிதக்காமல் இருப்பதற்காக மைல் கல்லை உடலுடன் சேர்த்து கட்டி உள்ளனர். கட்டப்பட்ட கல் மிகச்சிறியது என்பதால் தண்ணீரில் உடல் மிதக்கச் செய்தது. சிவமூர்த்தியின் கை கால்கள் கட்டப்பட்டுள்ளது. முகம் மற்றும் உடல் முழுவதும் டேப் ஒட்டப்பட்டுள்ளது. கைதான 3 பேரும் அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உடல் மிதந்தது. இந்த கொலைக்கு பின்னலாடை தொழிற்சாலை விவகாரம் ஒன்றுதான் இதன் பின்னணி என தகவல்கள் வெளியாகியுள்ளன. மாமியார் பத்மினி மரணம் போல மருமகன் சிவமூர்த்தி மரணமும் மர்மமான ஒன்றாகிவிட்டது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios