உல்லாசத்துக்கு இடையூறு... பெற்ற மகனை கள்ளக்காதலுடன் சேர்ந்து அடித்துக்கொன்ற காமவெறி பிடித்த தாய்..!
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள டானாவை சேர்ந்தவர் அந்தோணி பிரகாஷ் (29). டேங்கர் லாரி ஓட்டுநர். இவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு பொள்ளாச்சியை சேர்ந்த தீபா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தீபா நர்சிங் படித்துள்ளார். இவர்களுக்கு 4 வயதில் யோகேஷ் என்ற மகன் உள்ளார். அந்தோணி பிரகாஷ் டேங்கர் லாரி ஓட்டுநர் என்பதால் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். இதனால் தீபா தனது மகனுடன் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 4 வயது சிறுவன் அடித்துக்கொலை செய்யப்பபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள டானாவை சேர்ந்தவர் அந்தோணி பிரகாஷ் (29). டேங்கர் லாரி ஓட்டுநர். இவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு பொள்ளாச்சியை சேர்ந்த தீபா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தீபா நர்சிங் படித்துள்ளார். இவர்களுக்கு 4 வயதில் யோகேஷ் என்ற மகன் உள்ளார். அந்தோணி பிரகாஷ் டேங்கர் லாரி ஓட்டுநர் என்பதால் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். இதனால் தீபா தனது மகனுடன் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.
இதையும் படிங்க;- கணவர் கண்ணெதிரே இளைஞருடன் மனைவி உல்லாசம்... வேதனையில் தீக்குளித்து தற்கொலை..!
இந்நிலையில், தீபா, அந்த பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் வாங்கி இருந்தார். அந்த கடன் தொகையை வசூலிக்க அதே பகுதியை சேர்ந்த சொரிமுத்து (30) என்பவர் தீபா வீட்டுக்கு அடிக்கடி வந்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 20-ம் தேதி தீபா தனது மகன் யோகேஷ் மற்றும் கள்ளக்காதலன் சொரிமுத்து ஆகியோருடன் நெல்லைக்கு வந்துள்ளார். பின்னர் அவர்கள் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் சிறுவன் யோகேஷ், கட்டிலில் இருந்து கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்ததாக கூறி அவனை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று யோகேஷ் பரிதாபமாக இறந்தான். சிறுவனின் தந்தை அந்தோணி பிரகாஷ் தனது மகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இதையும் படிங்க;- அவிநாசி கோர விபத்து... பெற்ற தாயே தூரம் நின்றும்... முகம் சுளிக்காமல் சிதைந்த உடல்களை அள்ளிய காவலர்..!
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சிறுவனின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீபாவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தாய் தீபா, கள்ளக்காதலன் சொரிமுத்து ஆகியோர் சேர்ந்து சிறுவன் யோகேசை அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்த, இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். பெற்ற தாயே 4 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.