Asianet News TamilAsianet News Tamil

பட்டப்பகலில் குளியலறையில் இளம்பெண் கொடூர கொலை..!

சென்னை அண்ணாநகரில் வீட்டின் குளியலறையில் இளம் பிங்கி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

chennai young women murder... chennai police investigate
Author
Chennai, First Published Aug 5, 2019, 1:15 PM IST

சென்னை அண்ணாநகரில் வீட்டின் குளியலறையில் இளம் பிங்கி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  chennai young women murder... chennai police investigate

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் பிங்கி (30). இவரின் கணவர் உத்தம் மண்டேல். கணவன், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து அண்ணாநகரில் உள்ள குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார். இவர், டாட்டூ வரைதல், சேலை விற்பனை செய்துவந்தார். இவருக்கு உதவியாக அவருடன் இளைஞர் ஒருவர் தங்கியுள்ளார். chennai young women murder... chennai police investigate

இந்நிலையில், அந்த இளைஞர் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஷாப்பிங் சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது, குளியலறையில் பிங்கி கொடூரமாக முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக உடனே திருமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிங்கியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். chennai young women murder... chennai police investigate 

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது 2 பேர் பிங்கியின் வீட்டுக்குள் சென்றுவிட்டு பிறகு அவர்கள் புறப்பட்டுச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அவர்கள் யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அவரது கணவர் மற்றும் வீட்டில் இருந்த இளைஞரிடம் போலீசாரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.   

Follow Us:
Download App:
  • android
  • ios