Asianet News TamilAsianet News Tamil

ரவுடி கொடூரமாக வெட்டிப்படுகொலை... மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

சோழவரம் ஏரியில் ரவுடி திவாகரை 7 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

chennai  rowdy killed
Author
Tamil Nadu, First Published Dec 31, 2018, 3:13 PM IST

சோழவரம் ஏரியில் ரவுடி திவாகரை 7 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் திவாகர் (வயது 24). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. நேற்று மாலை நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து நேற்று சோழவரம் ஏரியில் திவாகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.chennai  rowdy killed

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தலை, கழுத்து, மார்பு பகுதியில் பலத்த வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். பின்னர் திவாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

முதற்கட்ட விசாரணையில் முன்விரோத அவரது நண்பர்களே சேர்ந்து அவரை கொலை செய்திருக்கலாம் என்று போலீசாரின் தரப்பில் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக வியாசர்பாடியை சேர்ந்த 7 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios