Asianet News TamilAsianet News Tamil

கார் டிரைவர் ஓட ஓட விரட்டி படுகொலை... ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மர்ம கும்பல்..!

சென்னையில் கார் ஓட்டுநர் நள்ளிரவில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விநசாரணை நடத்தி வருகின்றனர். 

car driver murder...police investigation
Author
Tamil Nadu, First Published Sep 10, 2019, 1:27 PM IST

சென்னையில் கார் ஓட்டுநர் நள்ளிரவில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விநசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை வில்லிவாக்கம் பலராமபுரம் 2-வது தெருவில் வசித்து வந்தவர் பாஸ்கரன் (40). கார் டிரைவரான இவர் கால் டாக்சி ஓட்டி வந்தார். இவர் காவல் நிலையத்தில் கொலை வழக்குகள் நிலுவையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு 12 மணி அளவில் பாஸ்கரன் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பினார். தனது வீட்டு அருகே காரை நிறுத்திய அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். car driver murder...police investigation

அப்போது 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் பாஸ்கரனை வழிமறித்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாஸ்கரன் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தார். ஆனால், அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பாஸ்கரன் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்ற கூறியபடியே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

பின்னர் கொலையாளிகள், தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாஸ்கரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். car driver murder...police investigation

முதற்கட்ட விசாரணையில் வில்லிவாக்கத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ரயில்வே தொழிற்சங்க தலைவரான ஜே.கே.புதியவன் வீடு புகுந்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பாஸ்கரன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், பழிக்கு பழியாக பாஸ்கர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் கொலையாளிகள் யார்? என்பது உடனடியாக தெரியவில்லை. மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios