Asianet News TamilAsianet News Tamil

கள்ளக்காதலியை கொன்று கழிவறையில் மறைத்து வைத்த கள்ளக்காதலன்... முறையற்ற உல்லாசத்துக்கு தேடிச்சென்றாதால் முடிவில் நிகழ்ந்த கோரம்...

பெண்ணை கொலை செய்து சடலத்தை கழிவுநீர்த் தொட்டியில் மறைத்து வைத்த சம்பவம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரகசிய சந்திப்பை சாதகமாக்கி, சொத்துக்களை எழுதிக் கேட்டதால் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

boyfriend killed his illegal wife
Author
Vellore, First Published Jul 27, 2019, 2:24 PM IST

பெண்ணை கொலை செய்து சடலத்தை கழிவுநீர்த் தொட்டியில் மறைத்து வைத்த சம்பவம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரகசிய சந்திப்பை சாதகமாக்கி, சொத்துக்களை எழுதிக் கேட்டதால் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த மேட்டு இடையம்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி சுலோச்சனா மாயமான நிலையில்,அவர், எங்கு சென்றார். என்ன ஆனார் என்பது தெரியாத நிலையில், திருச்சியில் இருந்து விருந்துக்கு வந்திருந்த கிருஷ்ணமூர்த்தியின் சித்தப்பா மகனான ரமேஷ் என்பவர், அங்குள்ள டாஸ்மாக்கில் மது அருந்திவிட்டு தான் ஒரு கொலை செய்து விட்டதாக புலம்பிய அழுதுகொண்டே பாகாயம் போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சுலோச்சனா மாயமான சம்பவத்தின் அதிர்ச்சிப் பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது.

மாயமான சுலோச்சனாவின் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் முடிந்து விட்ட நிலையில் சுலோச்சனாவுக்கும், ரமேஷுக்கும் தகாத பழக்கம் இருந்துள்ளது. திருச்சியில் கொத்தனாராக வேலைபார்த்து வந்த ரமேசுக்கு மனைவியும் இரண்டு  பெண் குழந்தைகளும் இருக்கும் நிலையில், வாரந்தோறும் சுலோச்சனாவை தேடிச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இதனால் சுலோச்சனா வீட்டிலும் மற்றும் ரமேஷ் குடும்பத்திலும் பிரச்சனை  நடந்துள்ளது.

வேலூர், இந்திரா நகர் பகுதியில் சுலோச்சனாவின் மருமகனுக்கு சொந்தமான வீட்டில் சுலோசனா மற்றும் ரமேஷ் ரகசியமாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

சுலோச்சனாவுடன் உல்லாச சுகத்துக்காக தனது பெயரில் உள்ள வீடு மற்றும் சொத்துகளை எழுதி வைப்பதாக சுலோச்சனாவிடம் ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார் ரமேஷ், இந்நிலையில், சம்பவத்தன்று ரகசிய சந்திப்பு நடந்தபோது ரமேஷ்- சுலோச்சனா இடையே சொத்து தொடர்பான பேச்சு எழுந்துள்ளது. தனது பெயருக்கு சொத்துக்களை மாற்றிக் கொடுத்தால் தான் இனி சந்தோஷமாக இருக்க முடியும் என சுலோச்சனா கோபமாக புறப்பட்டதால் ரமேஷுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, அங்கு கிடந்த இரும்புக் கம்பியால் சுலோச்சனா தலையில் பலமாக அடித்துள்ளார்  ரமேஷ். இதனால் ரத்த வெள்ளத்தில்  சரிந்த சுலோச்சனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சடலத்தை வீட்டில் உள்ள கழிவறைத் தொட்டியில் வீசி மறைத்து வைத்து விட்டு சென்றுள்ளார். சடலத்தை மறைத்துவைத்த அந்த வீட்டையும் போலீசாரிடம் அடையாளம் காட்டியுள்ளார். அங்கு விரைந்து சென்ற போலீசார் சுலோச்சனாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios