Asianet News TamilAsianet News Tamil

பட்டப்பகலில் பயங்கரம்..! பாஜக பிரமுகர் சரமாரியாக வெட்டிப்படுகொலை..!

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பாஜக பிரமுகர் ஒருவர் காலையில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

bjp worker was murdered in trichy
Author
Trichy, First Published Jan 27, 2020, 12:22 PM IST

திருச்சி மாவட்டம் பாலகரையைச் சேர்ந்தவர் விஜயரகு. அரசியல் பிரமுகரான இவர் திருச்சி மண்டல பாஜக செயலாளராக இருந்து வந்துள்ளார். இன்று காலையில் காந்தி மார்க்கெட் பகுதியில் அவர் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் விஜயரகுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். திடீரென மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

bjp worker was murdered in trichy

அதை சற்றும் எதிர்பார்க்காத விஜயரகு, மர்ம கும்பலிடம் இருந்து தப்பி ஓட முயன்றிருக்கிறார். ஆனால் அவரை விடாமல் துரத்திய மர்ம கும்பல் மேலும் பல இடங்களில் வெட்டிவிட்டு தப்பியுள்ளனர். இதில் படுகாயமடைந்த விஜயரகு ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விஜயரகுவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

bjp worker was murdered in trichy

தீவிர சிகிச்சை பிரிவில் விஜயரகு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத  பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொலை வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். செல்போன் திருட்டு தொடர்பான மோதலில் விஜயரகு கொலைசெய்யப்பட்டிருக்க கூடும் என்று கூறப்படுகிறது. இது சம்பந்தமாக மொபைல் லாட்டரி வியாபாரி மிட்டாய் பாபு என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பாஜக பிரமுகர் ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read:  11 வயது மகளை காமப்பசிக்கு இரையாக்க துடித்த தந்தை..! அதிர்ந்துபோன தாய்..!

 

Follow Us:
Download App:
  • android
  • ios