Asianet News TamilAsianet News Tamil

சிறுவன் செய்ற வேலையா இது.. பெண் கதற கதற பலாத்காரம்.. வெறி தீராததால் கொடூர கொலை!

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அமிர்தல்லியில் உள்ள காபி போர்டு அருகே பெண்ணின் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

bengaluru Women Brutal murder... police investigation tvk
Author
First Published Apr 4, 2024, 4:03 PM IST

பெங்களூருவில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அமிர்தல்லியில் உள்ள காபி போர்டு அருகே பெண்ணின் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. 

இதையும் படிங்க: செல்போனில் ஆபாச வீடியோ காட்டி அதுபோல செய்யலாமா பள்ளி மாணவியிடம் கேட்ட தலைமை ஆசிரியர்! இறுதியில் நடந்தது என்ன?

கொலை செய்யப்பட்ட பெண் ராய்ச்சூரைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி என்பது தெரிய வந்தது. அவர் வேலை முடிந்து இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது 18 வயது சிறுவன் அந்த பெண்ணை வழிமறித்து பலவந்தமாக இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து அவரை அடித்துக் கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியது தெரியவந்தது. 

இதையும் படிங்க:  கட்டாயப்படுத்தி திருமணம்! என்னுடைய சாவுக்கு இவங்கதான் காரணம்! கடிதம் எழுதிவிட்டு இளைஞர் தற்கொலை.!

இக்கொலையில் ஈடுபட்ட சிறுவன் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios