மகாராஷ்டிரா மாநிலம் கோதேன் கிராமம் அருகே ஷாய்தரி புலிகள் காப்பக வனப்பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் நேற்று சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்த 3 இளைஞர்களை வனத்துறையினர் அழைத்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த வேட்டைக்காரர்கள் என்பது தெரியவந்தது. 

மகாராஷ்டிராவில் மானிட்டர் பல்லியை 4 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மானிட்டர் பல்லி

மகாராஷ்டிரா மாநிலம் கோதேன் கிராமம் அருகே ஷாய்தரி புலிகள் காப்பக வனப்பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் நேற்று சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்த 3 இளைஞர்களை வனத்துறையினர் அழைத்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த வேட்டைக்காரர்கள் என்பது தெரியவந்தது. 

பலாத்காரம்

இதையடுத்து, அவர்கள் வைத்திருந்த செல்போன்களை வாங்கி வனத்துறையினர் பரிசோதித்து பார்த்தனர். அப்போது, சில வாரங்களுக்கு முன்பு இந்த வனப்பகுதிக்கு வந்திருந்த அவர்கள், அங்கிருந்த மானிட்டர் பல்லியான பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோவாக எடுத்து வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, அவர்களை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானால் கிட்டதட்ட 7 ஆண்டுகள் சிறைதண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.