Asianet News TamilAsianet News Tamil

திமுக ஊராட்சி தலைவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க படுகொலை... உச்சக்கட்ட பதற்றம்.. போலீஸ் குவிப்பு..!

சென்னை அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவர் கொடூரமாக துடிதுடிக்க வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Avadi DMK Panchayat leader murder
Author
Chennai, First Published Jul 15, 2020, 4:02 PM IST

சென்னை அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவர் கொடூரமாக துடிதுடிக்க வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையை அடுத்த ஆவடியை அடுத்த திருநின்றவூர் கொசவன்பாளையம் லட்சுமிபதி நகரை சேர்ந்தவர் பரம குரு (40). சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். திமுகவை சேர்ந்த இவர், கடந்த உள்ளாட்சி தேர்தலில் கொசவன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேற்று மாலை இவர் கொசவன்பாளையம் அம்பேத்கர் தெருவில் கால்வாய் அமைக்கும் பணிகளை பார்வையிட சென்றார். அங்கு பரமகுரு செல்போனில் பேசி கொண்டிருந்தார். 

Avadi DMK Panchayat leader murder

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்டு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு  போலீசார் விரைந்தனர். இதனிடையே, பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சாலையில் திரண்டு வந்து கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Avadi DMK Panchayat leader murder

பின்னர், அவரை உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவரை வெட்டி கொலை செய்தது யார் ? எதற்காக கொலை அவர் செய்யப்பட்டார் ? ஆகிய கோணங்களில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை  நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios