Asianet News TamilAsianet News Tamil

கணவரின் நண்பன் மீது ஈர்ப்பு.. அடிக்கடி தனிமையில் உல்லாசம்.. துண்டு துண்டாக வெட்டி புருஷனை பார்சல் கட்டிய மனைவி

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள சிக்கந்தர்பூர் நகர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ராகேஷ் (30)என்பவர் வசித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ராதா என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 

Attraction on husband's friend .. often flirting in solitude .. wife who cut her husband into pieces and tied the parcel.
Author
Chennai, First Published Sep 22, 2021, 1:18 PM IST

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை, கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கொடூர சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது. திருமணத்திற்கு புறம்பான உறவு எப்போதும் கொலையில் முடிவதை நாம் அன்றாடம் வரும் செய்திகளில் மூலம் அறியமுடிகிறது. அந்த வரிசையில் கணவனின் நண்பனுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த மனைவி தால்கட்டிய கணவனையே கொலை செய்துள்ள சம்பவம் பகீர் சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள சிக்கந்தர்பூர் நகர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ராகேஷ் (30)என்பவர் வசித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ராதா என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ராகேஷ் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்துவந்தார், பீகாரில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ளது, ஆனால் போலீசார் கண்டு கொள்ளாததால் கள்ளச்சந்தையில் மது விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ராகேசும் அந்த தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தனது தொழிலுக்குத் துணையாக இருந்து வரும் தன் நண்டர் சுபாஷ் என்பவரை தனது வீட்டுக்கு அழைத்து வந்த ராகேஷ், தனது மனைவி ராதாவிடம் அறிமுகம் செய்து வைத்தார். 

Attraction on husband's friend .. often flirting in solitude .. wife who cut her husband into pieces and tied the parcel.

அடிக்கடி சுபாஷ் வீட்டுக்கு வந்து சென்றதால் ராகேஷ் மனைவி ராதாவுக்கும் சுபாசுக்கும் இடையே நட்பு உருவானது, பின்னர் நாளடைவில் அது கள்ளக் காதலாக மாறியது, இந்நிலையில் கணவன் ராகேஷ் இல்லாதபோது வீட்டுக் வரும் சுபாஷ் உடன் ராதா தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்தார். கடந்த சில வருடங்களாகவே அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. இந்நிலையில் தனது கள்ளக்காதலுக்கு கணவன் இடையூறாக  இருப்பதாக உணர்ந்த ராதா கணவனை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனுக்கு மதுவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பின்னர் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.

Attraction on husband's friend .. often flirting in solitude .. wife who cut her husband into pieces and tied the parcel.

பின்னர் சடலத்தை அப்புறப்படுத்தும் வகையில் கணவன் ராகேஷ் உடலை துண்டு துண்டாக வெட்டிய ராதா, வீட்டில் இருந்த ரத்த கரைகளை அகற்றும் வகையில்  ரசாயனம் ஊற்றி கழுவ முயற்சி செய்தார். அப்போது திடீரென ரசாயன பாட்டில் கீழே விழுந்து அதி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அக்கம்பக்கத்தினர் ஓடோடு வந்து ராதாவின் வீட்டு ஜன்னலில் எட்டிப் பார்த்தனர்.  அப்போது வீட்டிற்குள் வித்தியாசமான நடவடிக்கைகளில் ராதாவும் அவரது கள்ளக் காதலன் சுபாசும் ஈடுபடுவதை அறிந்த பொதுமக்கள் அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டுக்குள்ள நுழைந்து பார்த்தபோது, கணவனின் உடலை ராதா கள்ளக்காதலுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டியது தெரிந்தது. 

Attraction on husband's friend .. often flirting in solitude .. wife who cut her husband into pieces and tied the parcel.

அதைக்கண்டு அதிர்ந்து போன போலீசார் உடனே அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் ராகேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார் நாகேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்காதலுக்காக கணவனை மனைவியே துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios