ஓசியில் இடியப்பம் புட்டு தராததால்  இளைஞர்கள் மீது  சிட்லபாக்கம் காவல் ஆய்வாளர் பொய்வழக்கு போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் கடை நடத்தி வரும் இளைஞர்களை சராமரியாக தாக்கி அவர்களை சிறையில் அடைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. 

ஓசியில் இடியப்பம் புட்டு தராததால் இளைஞர்கள் மீது சிட்லபாக்கம் காவல் ஆய்வாளர் பொய்வழக்கு போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் கடை நடத்தி வரும் இளைஞர்களை சராமரியாக தாக்கி அவர்களை சிறையில் அடைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் காவல்துறையின் மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் பாதுகாப்பாக, அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் என்பதே காவல்துறையின் தலையாய பணி. ஆனால் சில போலீசார் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை ஏய்த்து வாழும் செயல் அவமானத்திலும் அவமானம் ஆகும். இப்படிப்பட்ட செயலில் ஒரு காவல் ஆய்வாளரே ஈடுபட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை ஜமீன் பல்லாவரத்தில் வசித்துவரும் பட்டதாரி இளைஞரான சிலம்பரசன் என்பவர் சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பிரதான சாலையில் காவல்நிலைய சோதனைச்சாவடி அருகில், கடந்த ஓராண்டு காலமாக இடியாப்பம் புட்டு கடை நடத்தி வருகிறார். S12 காவல்நிலைய எல்லைக்குட்பட்டு இருப்பதால் அடிக்கடி கடைக்கு சிட்லபாக்கம் காவல் நிலைய காவலர் சுரேஷ் குமார் என்பவர் வந்து ஓசியில் இடியாப்பம் புட்டு கேட்டு வாங்கி செல்வது வழக்கம்.

அவர் போலீஸ் என்பதால் கடையில் பணிபுரிபவர்களும் அவர் கேட்டதை கொடுத்து அனுப்பி விடுவர். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கடைக்கு வந்த காவலர் சுரேஷ்குமார் இடியாப்பம், புட்டு பார்சல் கேட்டுள்ளார், கடையில் வாடிக்கையாளர்கள் அதிகமாக இருந்ததால் அவருக்கு பார்சல் கொடுப்பது தாமதமானது, இதனால் ஆத்திரமடைந்த காவலர் சுரேஷ்குமார் கடையில் இருந்த கடை உரிமையாளர்கள் சிலம்பரசன் மற்றும் அவரது தம்பி விக்னேஷ் ஆபாசமான வார்த்தைகளில் திட்டி காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர், எங்கிருந்தோ பிழைக்க வந்த நாய்கள் புட்டு கேட்டால் தர மாட்டீங்களா? இனிமேல் எனக்கு நீங்கள் மாத மாதம் பணம் கொடுக்கவேண்டும் என மிரட்டியுள்ளார். அடி வாங்கிய அவர்கள் எதற்கு சார் நாங்கள் உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என கேட்டனர்.

இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற காவலர் சுரேஷ்குமார் அவர்கள் இருவரையும் காவல் நிலைய வாகனத்தில் அழைத்துச் சென்று அங்கு வைத்து இருவரையும் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. பின்னர் அவர்கள் இருவரையும் காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரியிடம் ஒப்படைத்து அவர்கள் இருவர் மீதும் பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடை நடத்தி பிழைப்பு நடத்திவரும் வியாபாரிகளை இப்படி கடுமையாக தாக்கி அவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு மனித உரிமை மீறல் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மற்றும் அவர்கள் தாக்கிய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சக வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.