கேரள மாநிலம் மலப்புரம் அடுத்த மஞ்சேரியில் குழந்தையை விட்டு காதலனுடன் ஓடிய இளம் பெண் சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டார்.

வெளிநாட்டில் கணவர் :

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மஞ்சேரி போலீசார் மங்களசேரி தோட்டத்தை சேர்ந்த மங்களன் ஷஹானா ஷேர் மற்றும் பைசல் ரஹ்மான் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் சென்னை ஆண்டாள் நகர் கிராமத்தில் கைது செய்யப்பட்டனர். அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த மங்களன் ஷஹானா ஷேர் ஆறு மாதங்களுக்கு முன்பு பைசல் ரஹ்மானை சந்தித்தார். பின்பு இருவரும் நெருக்கமாகிவிட்டனர்.

அவர்கள் இரு குழந்தைகளையும் விட்டுவிட்டு பைக்கில் ஊரை விட்டு ஓடினர். பின்னர் இருவரையும் உறவினர்கள் சொந்த ஊருக்கு கொண்டு வர முயற்சித்தும் பலனளிக்கவில்லை. இதனை அடுத்த, வெளிநாட்டில் இருந்த பெண்ணின் கணவர் திரும்பி வந்து குழந்தைகளை கவனித்து வந்துள்ளார்.

ஓட்டம்பிடித்த கள்ளகாதலர்கள் :

இதுகுறித்து ஷஹானா ஷேரின் தந்தை அளித்த புகாரின் பேரில் மஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் தங்களது மொபைல் போன்களை அணைத்துவிட்டு சமூக வலைதளங்களில் தாங்கள் வெவ்வேறு இடங்களில் இருப்பது போன்று போலீசை திசை திருப்பியுள்ளனர்.

சென்னையில் அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து சுமார் 50 முதல் 80 கி.மீ. தொலைவில் உள்ள பல்வேறு வணிக வளாகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் இருப்பது போன்று புகைப்படங்களை பதிவிட்டு வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மாவட்டக் காவல் துறைத் தலைவரின் உத்தரவின் பேரில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, சென்னையில் பல நாட்கள் தங்கியிருந்து, சமூக வலைதளங்களில் தம்பதிகள் வெளியிட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைக் கண்டறிந்து, சிசிடிவியை மையமாக வைத்து ஆய்வு செய்தனர்.

சென்னையில் இருந்து 50 கி.மீ., தொலைவில் ஆவடி வீராபுரம், ஆண்டாள்நகர் கிராமத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் பலமுறை பணம் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் தமிழக காவல்துறையினரின் உதவியுடன் கிராமத்தில் உள்ள சுமார் 500 வீடுகளில் சோதனை நடத்தியதில் தம்பதியினர் பயன்படுத்திய இருசக்கர வாகனம் கிடைத்தது. பின்னர் அவர்கள் பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.