4 குழந்தைகளின் தாய் 15 வயது சிறுவனுடன் ஓட்டம்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராக பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும், தொடர்ந்து கொண்டே வருகிறது. ஆனால், மற்றொரு பக்கம் ஆண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது. அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆந்திரா மாநிலம், அருகே உள்ள குடிவாடா என்ற பகுதியை சேர்ந்தவர் ஸ்வப்னா. இவருக்கு வயது 30 ஆகிறது. இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக பிரச்சனைகளால் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் வசிக்கும் எதிர் வீட்டில் இருக்கும் 8ம் வகுப்பு படிக்கும் சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

எதிர்வீடு தானே என்று அடிக்கடி வந்து பழக, நாளடைவில் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று டி.வி பார்க்கும் அளவிற்கு சென்றுள்ளது. இதனை தனக்கு சாதகமாக மாற்றி கொண்ட ஸ்வப்னா ஒரு திட்டத்தினை தீட்டியுள்ளார். அப்போது அந்த 15 வயது சிறுவனுக்கு ஆபாச வீடியோக்களை போட்டுக்காட்டியுள்ளார். இருவரும் அடிக்கடி நெருக்கமாகவும் இருந்துள்ளனர். இப்படி பல நாட்களாக இருந்து வந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த 19ம் தேதி இருவரும் வீட்டை விட்டு சென்றுள்ளனர். இப்படியொரு சம்பவம் நடைபெற்றதை அறியாத சிறுவனின் பெற்றோர், சிறுவனை காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்து இருக்கிறார்கள். இதையடுத்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், ஸ்வப்னாவையும் காணவில்லை என்பதை உறுதி செய்து அவரின் செல்போன் எண்ணை வைத்து தேடினர்.

தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீசார், இருவரும் ஐதராபாத்தில் ஒரு லாட்ஜில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஐதராபாத் விரைந்த போலீசார், ஸ்வப்னாவை போக்ஸோ வழக்கில் கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கவுன்சிலிங் வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு..சந்தன கடத்தல் வீரப்பன் டூ டெல்லி காவல் ஆணையர்.. யார் இந்த சஞ்சய் அரோரா ?