Asianet News TamilAsianet News Tamil

திருமணமான பெண்ணை தூக்கிச் சென்று, தனி அறையில் கட்டிவைத்து பலமணிநேரம் உல்லாசம்.. மருத்துவமனையில் சிகிச்சை.

திருமணமான பெண்ணை கடத்திச் சென்று அறையில் அடைத்து வைத்து இளைஞர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது. முன்னதாக அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத் காரம் செய்து வந்த நிலையில் மிண்டும் இந்த கொடுமை நடந்துள்ளது. 
 

A married woman was kidnapped, tied up in a separate room and raped In Rajasthan.. Police investigation.
Author
First Published Oct 11, 2022, 6:21 PM IST

திருமணமான பெண்ணை கடத்திச் சென்று அறையில் அடைத்து வைத்து இளைஞர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது. முன்னதாக அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத் காரம் செய்து வந்த நிலையில் மிண்டும் இந்த கொடுமை நடந்துள்ளது. 

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்க அரசும் காவல்துறையும் எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, பொதுவாக நாடுமுழுவதும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. பெண்களின் வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது, ஒவ்வொரு நாளும் பல இடங்களில் பெண்கள் துன்புறுத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது, நாள்தோறும் பலாத்கார செய்திகள் வந்த வண்ணம் உள்ளன, பெண்கள் தனியாக அகப்படும் நேரங்களில் அவர்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும் அவலம் தொடர்கிறது.

A married woman was kidnapped, tied up in a separate room and raped In Rajasthan.. Police investigation.

இதுபோன்ற  வன்முறைகள் கோவில், பள்ளிக்கூடம், என எல்லா இடங்களிலும் அரங்கேறி வருகிறது. காவல் நிலையங்களில் கூட பெண்கள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெறுகிறது. சில இடங்களில் அவர்களை பாதுகாக்க வேண்டிய குடும்ப உறுப்பினர்களாலேயே அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யும் கொடுமைகள் உள்ளது. அந்த வரிசையில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ள கொடூரம் அரங்கேறி உள்ளது.முழு விபரம் பின்வருமாறு:-

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் திருமணமான 25 வயது பெண்ணை  ஒருவர் பல நாட்கள் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.   கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்தப் பெண் வீட்டில் தனியாக இருப்பதை கண்டு அந்த நபர், வீட்டுக்குள் நுழைந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்தார். அதில் அந்தப் பெண் மயங்கினர், அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்த அந்த அந்த நபர், அதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் அதைக் காட்டி மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்து வந்தார். 

A married woman was kidnapped, tied up in a separate room and raped In Rajasthan.. Police investigation.

இந்நிலையில்தான் அந்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருப்பதை பார்த்த அந்த காமக் கொடூரன், அந்த பெண்ணை வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று அறையில் அடைத்து வைத்து, அந்த பெண்ணின் கை கால்களை கட்டி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டார். ஒரு நாள் முழுவதும் இந்த கொடூரத்தில் அந்தநபர் ஈடுபட்டதாக தெரிகிறது.

இரவு வெகுநேரம் ஆகியும் மனைவி வீட்டிற்கு வராததால் அவரது கணவர் தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி காவல் நிலைத்தில் புகார் கொடுத்தார். இந்நிலையில் அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர், அப்பகுதி முழுவதும் அந்த பெண்ணை தேடினர். கடைசியாக ஒரு வீட்டில் அந்தப் பெண் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தார். பின்னர் அந்தப் பெண்ணை மீட்டு போலீசார் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. பாலியல் வன்புணர்வு செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios