Asianet News TamilAsianet News Tamil

பக்கத்தூ வீட்டு பெண்ணுடன் 62 வயது முதியவர் உல்லாசம்.. உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை.

பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் அடிக்கடி உடலுறவில் ஈடுபட்டு வந்த 62 வயது முதியவரை அந்தப் பெண்ணின் உறவினர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளனர்.

A 62-year-old man had an affair with a housewife next door. and murdered
Author
Telangana, First Published Jun 9, 2022, 8:29 PM IST

பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் அடிக்கடி உடலுறவில் ஈடுபட்டு வந்த 62 வயது முதியவரை அந்தப் பெண்ணின் உறவினர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம்  தெலங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.

பெரும்பாலான கொலை, தற்கொலைகள் கள்ளக்காதலை மையமாக வைத்தே அரங்கேறி வருகிறது. அந்த வகையில் 62 வயது முதியவர் ஒருவர் பக்கத்து வீட்டு பையனுடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்த நிலையில் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் காம ரெட்டி மாவட்டம்  பிபிபேட்டா மண்டலத்தை சேர்ந்தவர் இரரோல்லா மல்லையா (62) இவரது மனைவி நர்சவ்வம்மா இருவரும் விவசாயம் செய்து பிழைத்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் நடந்து முடிந்துவிட்டது. வயதான தம்பதியர் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

A 62-year-old man had an affair with a housewife next door. and murdered

இந்நிலையில் மல்லையா பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்தார். அடிக்கடி அந்தப் பெண்ணுடன் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிந்தது. பலமுறை மல்லையாவை எச்சரித்து வந்தனர். ஆனால் அவர் கேட்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில் பக்கத்து வீட்டுப் பெண்ணை மீண்டும் தனது தனது வீட்டுக்கு  அழைத்து வந்து மல்லய்யா உடலுறவில் ஈடுபட்டார் நள்ளிரவில்  நடந்த இந்த சம்பவத்தை அந்தப் பெண்ணின் உறவினர்கள் பார்த்து விட்டனர். பின்னர் மல்லையாவை  கடுமையாக தாக்கினர், பைக்கில் இருந்த பெட்ரோலை எடுத்து மல்லையா மீது ஊற்றி தீ வைத்து எரித்தனர். அதில் பலத்த காயமடைந்த மல்லையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு கிராம மக்கள் கூடினர், இதுகுறித்து உடனே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மல்லையாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இரண்டு  குழுக்களை அமைத்து மல்லையாவை கொன்ற கள்ளக்காதலியின் உறவினர்களை தேடினர் அதில்  கொங்காரி போச்சையா, ராஜ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இறந்த மல்லையா மாந்திரீகம் செய்து தங்கள் வீட்டு பெண்ணை மயக்கி உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறினர்.

A 62-year-old man had an affair with a housewife next door. and murdered

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், இதில் இன்னும் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகிறார், மேலும் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நிஜாமாபாத் சிறையில் அடைத்தனர். முதியவர் திருமணத்தை மாறிய பாலியல் உறவில் ஈடுபட்டு தீயிட்டி எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios